பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 தன்னம்பிக்கையும் ஏற்படும். அதனால் இம்முயற்சியில் ஈடுபட்டேன்.

தம்ம பதம் நூலிலுள்ள கருத்துக்கள் சிலவற்றை நூற்றொரு பாடல்களில் தொகுத்துக் கூறியிருப்பதல்லாமல் மேற்கொண்டு, புத்தர் தம் வாழ்க்கையில் பலர்க்குப் பல வேளைகளில் கூறிய அறவுரைகள் சிலவற்றைப் பதினொரு பாடல்களில் தொகுத்துப் டபிற் சேர்க்கை' என்னும் தலைப்புடன் இந்நூலின் இறுதியில் அமைத்துள்ளேன்.

கி.பி. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகிய இந்தக் காலத்தில், புதுமை, பொதுவுடைமை, புரட்சி, பகுத்தறிவு, சீர்திருத்தம், முன்னேற்றம்-என்னும் பெயர்களில் கூற ப் படும் கருத்துக்கள், இன்றைக்கு ஏறக்குறைய 2500 ஆண்டு கட்கு முன்பே புத்தரால் அருள்ப் பெற்றுள்ள கருத்துக்களில் கருக்கொண்டவை எனக்கூறலாம். புத்தர் தம் கருத்துக்களில் வலுக்கட்டாயப் படுத்தித் திணிக்கவில்லை; ஆ ய் ந் து பார்த்து நிலைமைக்கு ஏற்ப ஏற்றுக் கொள்ளலாம் என்ற உரிமையும் அளித்துள்ளார். எனவே, புத்தரின் புரட்சி பழம் பெரும் புரட்சியாகும். இதனை, இ ந் நூ லைக் கற்றுணர்வோர் நன்கு நம்புவர்.

நூலைக் கற்பதோடு அமையாமல், நூலில் கூறப்பட்டுள்ள அறக் கொள்கைகளை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. உலகில் அறநெறி ஓங்குக!.

இந்த நூலை நன்முறையில் வெளியிட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தாருக்கு நன்றி செலுத்தும் கடப்பாடு மிகவும் உடையேன்.

புதுச்சேரி

அன்புள்ள அடியவன்

பிப்ரவரி, 1985

சுந்தர சண்முகன்