பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பகுதி) * தமிழ்ப்புலவர் சரித்திரம் : 445 நம்மை யொருகணத்தினு ளுயிர்போக்கக் கருதிய பாவியேன் யான்; என்று கூறித்தழுவித் தாங்கொணர்ந்த கல்லையுங் காட்டித் தம்மீது பொறை (பாராட்டு மாறு அவரை வேண்டிக் கொண்டனர், இஃதுணர்ந்த ஒட்டக்கூத்தர் களிப் படைந்து புகழேந்தியாரோடும் உள மொத்த நட்புப் பாராட்டுவாராயினார், மன்னவன் குலோத்துங்கனும் மற்றைய பாவலரு மிச்செய்தி கேள்வியுற்று மகிழ்ச்சி யெய்தினார். இனியொருகாட் சோழ ராசன் திருநெய்த்தான மென் ஆந் திருப்பதிக்க ணெழுந்தருளியிரா நின்ற சிவபிரான்மீது 'நெய்த்தானத்தா இன்ச் சேவித்தே,' யென்பதனை மகுடமாகக் கொண்டு சந்த விருத்தமொன்று ஆசு கவியாகப் பாடுமாறு சொல்லணும், ஒட்டக் கூடத்தரும், புகழேந்தியும் முறையே, 4் விக்கா வுக்கரா வித்தா விப்போய் விட்டார் கட்டார் சுட்நீர் புக்கா ரிக்கா யத்தா சைப்பா டுற்றே யிற்றே டிப்போய் வைப்பீர் நிற்பி பக்கா டப்பேய் தொக்கா டச்சூ முப்பா டத்தீ வெப்பா டப்பூ ணெக்கா டக்கா னத்தா டப்போ நெய்த்தா னத்தா னைச்சே லித்தே," தற்கோ லிப்பூ சற்பா சத்தே தட்டா மற்சா கைக்கே நிற்பீர் முற்கோ லிக்கோ விப்பூ சித்தே முட்டா மற்சே வித்தே நிற்பீர் வற்றா நெட்டோ டைப்பா ரைச்சேன் மைப்பூ கத்தே றித்தா விப்போய் நெற்றா ளுற்ற லைப்பா கிற்சேர் நெய்த்தா னத்தா னைச்சே வித்தே,” என்ற பாடல்களைப் பாடினார்கள், இனி யிவற்றி னேற்றத் தாழ்வுக ளொரு புற மிருப்பு, இச்செய்திக்கு மாறாக ஒட்டக்கூடத்தரைப் புகழேந்திப் புலவர் வென் றனரென்று, நூலார் கலைவல்ல செம்பியன் கேட்க நொடித்துமிக்க கோலா கலனொட்டக் கூத்தனை யன் அதற் கோவியென்று ' மேலார் கவிசொல்லி நெய்த் தானத் தேசென்று வென்றுகொண்ட . மசலார் களத்தைப் புகழேந்தி யுத்தொண்டை மண்டலமே,” 24 யென்ற தொண்டை மண்டல சதகச் செய்யுள் முழங்கா நிற்கும். இன்னுமொரு காலத்தில் திருக்குறுங்குடி யென்னும் தலத்தினிடத்கெழு ந்தருளி யிருக்கும் திருமாலின் மீது வல்லோசை மிக்க கட்டளைக் கலித்துறை யாப்பிற் பாடுமாறு கேட்டலும், ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் முறையே, . - 57