பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 381 தியானித்து, உள்ளம் உருகி, அவிரோத ஞானம் கொண்டவனாப் (எல்லா உயிரும் எனதுயிர் என்னும் இதயபாவனை உடையவனாய்), அருள் பெருகும் பரம சுகமாம் மகோததி - பெரிய கடலில், கருணை நிறைந்த உன் அடியார்களுடன் கூடித்திளைத்து மகிழ்ந்து, (நீபம்) கடம்பும். (கனகமணி வயிரம்) பொன், ரத்னம், வயிரம் இவை விளங்கும் (நூாபுரம்) சிலம்பு அணிந்ததும், (ஆரிய) மேலான (கிரண) ஒளிவீசுவதும், (சரணம்) அடைக்கல்த்தானமாய், (அபிராம) அழகுள்ளதாய், (கோமளம்) இளமை விளங்குவதான (கமலயுகளம்) உன் திருவடித்தாமரைகளாம் இரண்டையும் நான் மறவாமல் பாடத் தங்கள் திருவுள்ளம் நினைவு கொள்ளாதேர்! ங்களை நெறுநெறென வேருடன் முறியும்படி மோதியும், (தன்னைக் கொல்லக் கருதிவந்த அலகைப் பேயின் கொங்கையைக் (கோதி) குடைந்து தோண்டியும், தெருவிலே (மதுகையோடு) வலிமையுடனும் (தறுகண்) கொடும்ையுடனும் கொல்லவந்த (ஆனை) குவலயா பீடம் என்னும் யானை (விசிட) அலறிக் கூச்சலிட் அதை வென்றும், காலால் வலிமை வாய்ந்த (சகடு) வண்டியை (இடறி) எற்றி உதைத்து (மாயமாய்) தந்திரமாய் - மடிபடிய - மடிதல் படிய (தன்னைக் கொல்லவந்த அசுரன் மறுபடியும் (நடைபழகி) தவழ்ந்து நடந்தும், ஆயர்பாடியில் - இடைச் சேரியில் வளர்ந்த் (முகில்) மேக. வண்ணனாம் திருமாலின் மருகனே வேலாயுதத்தை ஏந்தும் அற்புத மூர்த்தியே மயில் வீரனே! (விருதர்) வீரர்களாம் அசுரர் குலச் சேனைகளைத் துகைத்தழித்த (விஜய) வெற்றியாளனே (கடம்) மதத்தைக்கொண்ட விசாலமான, (கபோலம்) கன்னத்தை உடைய (வாரணம்) ஐராவதம் வளர்த்த (விபுதை) தேவமாது - தேவசேனையின் புளகம் கொண்ட (தனபாரம்) கொங்கைப் பாரங்களைப் (பூஷண) அலங்காரமாகத் தரித்துள்ளவனே! (அம்) அழகிய (கிராத வேடர் குலத்து (விமலை) பரிசுத்ததேவி - வள்ளியின் (நகில்) கொங்கையை (அணையும்) (அருண) - சிவந்த (வாகுயூதர) தோள்மலையை உடையவனே (வி.புத கடக தேவர்களாம் சேனைக்கு நாயகனே! கிரிமேரு யூதர விகட சமர மலைகளுள் மேருமலையுடன் மாறு பட்டுப் பொருதவனே! (சதகோடி) நூறு கோடிக்கணக்கான - எண்ணரிய - (வானவர்) தேவர்களுக்குத் தம்பிரானே! (மறவாதுபாட நினைந்திடதோ)