பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1108. நரஸ்துதி தவிர தானனா தத்தனத் தானனா தத்தனத் தானனா தத்தனத் தனதான கோலகா லத்தைவிட் டாசுபா டக்tகொடிக் கோவைபா டக்கொடிக் கொடிவாதிற். கோடிகூ ளக்கவிச் சேனைசா டக்#கெடிக் கூறுகா ளக்கவிப் புலவோன்யான், o சிலகா லப்புயற் பாரிசா தத்தருத் த்யாகமே ருப்பொருப் பெனவோதுஞ் -சிதரா itசித்ரவித் தாரமே செப்பிடக் கேளெனா நிற்பதைத் தவிர்வேனோ, ஆலகா லப்பணிப் பாயல்நீ ளப்படுத் தாரவா ரக்கடற் கிடைசாயும். "ஆசுபாடுதல்" - கொடுத்த பொருளை அடுத்த பொழுதிற் பாடும் பாட்டு - ஆசுகவி - திருப்புகழ் 273 பக்கம் 180 குறிப்பு. f "கொடிக்கவி' - கொடியைச் சிறப்பித்துப் பாடும் கவி: உமாபதி சிவாசாரியார் தில்லையில் உள்ள கோயிலிற் கொடி ஏறும்படிக் "கொடிக்கவி" பாடியுள்ளார். கோவை" அகப்பொருளிற் பாடப்படும் - திருக்கோவையார்" போன்ற நூல்கள் - இது தொண்ணுாற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. இனி " கொடிக் கோவை" என்பதில் கொடி" என்பதைக் கோடி" என்பதன் குறுக்கம் எனக் கொண்டு, கோடிக் கணக்காகக் "கோவை' பாட எனலுமாம்.

  1. கெடி கூறுதல் - தனது கீர்த்தியை எடுத்துக் கூறுதல். x 'காளக்கவிப் புலவோன் - என்பது காளமேகப் புலவரையும் குறிப்பிடலாம். காளமேகப் புலவர் போன்ற பெரும் புலமையை உடையவன் எனப்பொருள் தரும். காளமேகப் புலவர் அருணகிரியாருடன் சம காலத்தில் அல்லது சற்றுமுன்பு (15-ஆம் நூற்றாண்டில்) இருந்த தெய்விகப் புலவர். திரு ஆணைக்கா அகிலாண்டேகரியின் திருவருளைப் பெற்று ஆசுக்குக் காளமுகில் ஆவனே" என்று ஆசுகவிபாடுவதில் மகா நிபுணராய்த் திகழ்ந்த புலவர் பெருமான் பாடல் 464 பக்கம் 46 குறிப்பு -

காளம் - முதலியன அக்காலத்துப் புலவர்களின் விருது - சின்னம் பாடல் 80 அடி 4 பார்க்க; ஆகவே காளக்கவி" ஒரு பட்டம் ஆகும். (தொடர்ச்சி பக்கம் 237)