பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 523 நாணம் உடையவளும், ஜெயமே பெறும் வேடர் குலத்திலே யாவரும் நாடும் (பெருமையை உடைய) குயில் போன்றவளும், (பார் மிக்க) பூமியில் யாரினும் மேம்பட்ட அழகுள்ளவளும் ஆகியமாது கடல்போற் பெரிய கண்களைக்கொண்ட வேட்டுவச்சி ஆகிய வள்ளியின் கணவனே (மத்தம்) மதம் கொண்ட யானையின் முகத்தை உடைய கணபதிக்குத் தம்பியே! வீரத்துடனே (போருக்கு எழுந்த குரனுடைய அழகிய மார்பிடத்தே வேலாயுதத்தை நன்கு செலுத்தின பெருமாளே! (முகமாறும். நித்தம் உரையேனோ) 1216. இடை இவ்வளவே (ஒரு கைப்பிடி அளவே உள்ளவர்களும், கிளி ப்ோன்றவ்ர்களுமான ம்ாதர்களின் வாயிதழ் ஊறலைத் துய்த்து அனுபவித்து (அவர்களுடைய) அனுபோகத்தில் இன்ப நுகர்ச்சியில் மனம் இளகிக் - காமம் கரை புரண்டு ஒட நிரம்பி மிகப் புளகாங்கிதம் கொண்டதும், பச்சைக் கற்பூரம் அணிந்துள்ளது மான கொங்கைப் பாரத்திலே (உடனாகி) சேர்ந்தவனாப் (மன்) மிகவும் (அல்லது மல் - அக் கொங்கையுடன் மல் ப்ோர் புரிந்து) (கடைபடும்) இழிந்த நிலையிற் சேரும் (எனது துற்குணம் - தீக்குணம் - ஒழிய (நிற்குண உணர் வாலே குணம் கடந்த ஞான உணர்ச்சியாலே ப்பற்றதும், உருவிலாததுமான(வடிவில்) ஒரு நிலையில் - முத்தி நீேேதிருேஃே அறிவின் திடம் இல்லாது விளங்கினவனும், தாமரையில் வீற்றிருப்பவனுமான பிரமன் (நீ ಥಿ சிறையில் அகப்பட்டுக் க்ொன்டான் என அறிந்து (சிவபிரானிடம் முறையிடச்) சென்ற வரும், (தெதி பட்சன) தயிர் உண்டவர், (க்ருத பட்சன) நெப் உண்டவர் (செக பட்சனர்) உலகை யுண்டவர் என்று போற்றப்படுபவரும், விஷத்தை உண்ட சிவபிராற்கு அழகிய மைத்துனரும் ஆகிய திருமால் வெருவ் (சூரனுக்குப்) பயந்து நிற்க (அந்தப் ப்யத்தை நீக்கும் ப்ொருட்டுத் தேவிர்களுக்குப் பன்க்வர்க்ளான அசுரர்களின் மேல் வேலாயுதத்தை (விடு விக்ரம செலுத்தின பராக்ரமசாலியே அஷ்ட கிரிகளையும் விழும்படி வெட்டிய பெருமாளே! (நிஷிகள வடிவிற் புகப் புரிவாயே)