பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உலகம் அர்த்தமற்றதா!

[சர்மாவுக்கு] உலகம் - அர்த்தமற்ற கேலிக் கூத்துப் போலும், அசட்டுத்தனம் போலும் பட்டது.

வீட்டுச் சொந்தக்காரனின் நினைப்பு

சென்னையில் ‘ஒட்டுக் குடித்தனம்’ என்பது ஒரு ரசமான விஷயம். வீட்டுச் சொந்தக்காரன் குடியிருக்க வருகிறவர்கள் எல்லோரும் ‘திருக்கழுக்குன்றத்துக் கழுகு’ என்று நினைத்துக் கொள்வானோ என்னமோ?

மூன்றெழுத்து மந்திரம்

பிள்ளையவர்களைப் பொறுத்தவரை, அவர் இந்தப் பணம் என்ற மூன்றெழுத்து மந்திரத்தில் தீவிர சிந்தை செலுத்துபவர்.

யாருக்கு அதிர்ஷ்டம்

நான் பத்திரிகையை விட்டுவிட்டா, கதை எழுதாமல் இருந்து விடுவேனோ? ஒரு பெரிய நாவலுக்குப் ‘பிளான்’ போட்டிருக்கேன். தமிழன்களுக்கு அதிர்ஷடம் இருந்தால், எனக்குக் காகிதம் வாங்கவாவது காசு கிடைக்கும்.

நிஜமானது எது?

வாழ்க்கையில் ஒன்று தான் நிஜமானது. அர்த்தமுள்ளது. அது தான் மரணம்.

35