பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

பாரதிதாசன்


பிரசாதி யோடு பிராண லிங்கியாகி
உரைசாரும் போகாங்க மொன்றென்று
சொன்னானோ.

6. திருமாமகள் நாக்சியார் தாலாட்டு :-

(18ஆம் நூற்றாண்டு. 25 கண்ணிகள். திருக்கோட்டியூர் திருமாமகள் என்னும் பிராட்டியார் மீது அமைந்துள்ள துதிநூல், சிறப்பான அமைப்புடையது. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், அம்புலி, வருகை, சிறுதேர் ஆகிய பருவங்கள் குறிப்பிட்டு, பருவத்துக்கு இருகண்ணிகளைக் கொண்டது.)

நீராட்டிமையெழுதி நெற்றியின்மேல் காப்பணிந்து
தாராட்டும் கோட்டி,நகர்ப் பைங்கிளியே தாலேலோ.

தெய்யலங் காரர் திருச்செல்வம் ஆளவந்த
உய்யவந்த கோட்டிக் கடையவளே தாலேலோ.

மஞ்சுசேர் மாட மதிட்கோட்டி நாரணற்குக்
கொஞ்சுவாய் முத்தம் கொடுக்கவந்த கோகிலமோ.

எம்பிரான் கோட்டிக் கிறைவனார் தேவிதன்மேல்
அன்பினால் தம்மை ஆரடித்தார் ஆராரோ.

ஆணிக் கனகத் தளகையான் தான்விடுத்த
மாணிக்கத் தொட்டிலுள்ளே மாமகளே கண்வளராய்.