இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
84
பாரதிதாசன்
ஓர்குடைக் கீழ்ஆண்ட உவகை
உனக்குண்டு!
சேரனார் சோழனார் சேர்த்தபுகழ்
உன்புகழே!
ஓவியக் கரைகண்டார் உண்மைநெறி
தாம்வகுத்தார்
காவிய சிற்பத்தில் கவிதையினில்
கைகாரர்
உன்னினத்தார் என்றால் உனக்கின்னும்
வேண்டுவதென்?
பொன்னில் துலங்குகின்ற புத்தொளியே
கண்ணுறங்கு!
கற்சுவரை மோதுகின்ற கட்டித்
தயிரா, நற்
பொற்குடத்தில் வெண்ணெய் தரும்
புத்துருக்கு நெய்யா, நல்
ஆனைப் பசுக்கள் அழகான
வெண்ணிலவைப்
போல்நிறைத்த பாலைப் புளியங்கொட்டை
தான் மிதக்கும்
இன்பநறும் பாலா, என்ன இல்லை ?
கண்ணுறங்காய்.
அன்பில் விளைந்த என் ஆருயிரே
கண்ணுறங்கு!