பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டுப்பாடல்கள்

49


சிரங்கட்டிரு வெள்ளைறையுந் சிந்தையமு
தூற்றிருக்க பரங்கொள்நெடு மாமுகிலைப் பாடும்

பராங்குசனோ குயிலார் திருச்சித்ரகூடஞ்சேர்
காழி நகர் புயல்போல மேனியரைப் போற்றிய

நம் மாழ்வாரோ திருமாலை யாண்டான் திருவாய்
மொழித் தமிழைத் திருத்தும் புவியோர்க்குத் திருந்திய

நம்மாழ்வாரோ திருமல்லி நாடுந் திருப்பாவை
முப்பதுங் கருதுந் தமிழ்தன்னைக் காட்டியநம்
மாழ்வாரோ.

5. சிவஞான பாலைய தேசிகர் தாலாட்டு :-

(18ஆம் நூற்றாண்டு. 100 கண்ணிகள். பெரும்புலவராகிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் தம் ஞானாசிரியர் மீது பாடிய துதி.)

என்று நித்த பூரணமாம் இன்பவறி வுண்மையராய்
நின்றபடி நிற்கும் நிகழ்பிரம மென்றானோ.

கமன மழிந்து கறையற்று நிற்குந்
சுமனமதில் நின்றலிகந் தூயசரமென்றானோ.

வானேத்த வென்று மருவற் கரியபதம்
நானேத்த நல்கசிவஞானகுரு தேசிகனோ.

எந்தைசிவ சாதனங்கட் கெல்லாந் திருநீறு
முந்தியதென் றுண்மை மொழியும் பெருமானோ.