இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாலாட்டுப் பாடல்கள்
79
முகநிலவு மேலேநான் உன்உச்சி
மோந்தால்
மகிழ மகிழ வருமணத்துக்
கீடாமோ!
எமையாள் இனத்தாரின் யாழின்
இசையும்
குமிக்கும் ஒருவேய்ங் குழலின்
இசையும்
தமிழின் இசையும் சரியாமோ
என்றன்
அமிழ்தே மலர்வாய்நீ அங்காப்பின்
ஓசைக்கே?
இன்பத்து முக்கனியே என்னன்பே
கண்ணுறங்கு!
தென்பாண்டியர்மரபின் செல்வமே
கண்ணுறங்கே
.
குடும்பவிளக்கு - 4