பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒழுகினாள் ரஞ்சிதம். கடமை ஒழுங்கும் கண்ணியப் போக்கும் பூண்டு கடந்தாள்.

ஒரு கட்டம்:

சோலையம்மன் கோயிலில், ‘சாமி’ கும்பிடுகிறாள் ரஞ்சிதம். ஒளிந்திருந்து, அவள் வேண்டுதலுக்கு மனிதக் குரல் தருகிறான் குமரன். தெய்வமாகி வந்த குமரனோ? ‘தாவிப்படரக் கொழுகொம்பில்லாத தனிக்கொடி போல்’ இருந்தவளுக்கு அவன் தானே குமரன்!...

“அவங்களுக்கு நல்ல புத்தியைக் கொடு!”. என்று வேண்டினாள் அவள். ‘அவங்களுக்கு...’ என்ற உறவுச் சொல்லின் உரிமையை ‘அர்த்தம்’ காண விழைகிறது. குமரனின் அடிமனம். தன்னை நினைத்துத்தான் அவள் அவங்களுக்கு நல்ல புத்தியைக் கொடு!’ என்று ‘நேர்ந்து’ கொண்டதாக அவன் கருதினான், உண்மை நடப்பும் அதுவே!

குமரனைச் சூழ்ந்த சுற்றுச் சார்புகளும் சூழ் வினையின் சூதுமதித் திரிபுகளும் அலைக்கழித்த உண்மையை ரஞ்சிதம் எங்ஙனம் தட்டிக் கழிப்பாள்?...

துயரங்களின் தழும்புகள் காய்த்துத் தொங்கிய போக்குடன் ஊர் திரும்புகிறான் குமரன். ரஞ்சிதத்தைப் பார்க்கிறான். ‘அண்ணி’-ஆம்; அவளைத் திருமணம் செய்து கொண்டதாகப் பொன்னன் சொன்னன்!

ரஞ்சிதம் குமரனைப் பார்க்கிறாள், அவள் வழிப்புகுந்து, இதயம் சேர்ந்து அவனைப் பார்க்கின்றாள். ஆயிரமாயீரங் குற்றங்களை அவன் செய்திருந்தாலுங்கூட, அன்பும் அவன் பக்கம் மாயாதது போன்ற நோக்குடன் ரஞ்சிதம் நிற்கிறாள்.

82