பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 479 T 194. (மைக்கு) மையில், கைபுக கையைப்புகவைத்து - கயல்மீன் போலும் கண்ணில் (எற்றிக் கொட்டிட்டு) படும்படிக் கொட்டிப் பூசிச் (சிலைமதன்) கரும்புவில் ஏந்திய மன்மதனுடைய (வர்க்கத்தை) கூட்டத்தில் வகுப்பிற் சம்பந்தப்பட்டவர்களுக்குக் காம ஆசை கொண்டவர்களுக்குக் (கற்பித்திடு) - பாடம் சொல்லிக் கொடுக்கும் (திறமொழியாலே) சாமர்த்தியப் பேச்சாலே (மட்டிட்டு) தேன்போல இனிக்கச் செய்து, துஷ்டத்தனமும், கர்வமும் கலந்த பேச்சுக்களை (இட்டிட்டு) இடை இடையே பேசிப்பேசி, (சுற்றி) வளைத்துப் (பரிமளம்) நறுமணம் உள்ள (மச்சப் பொற்கட்டில்) நல்ல மாற்று உள்ள அழகிய கட்டிலில் அல்லது "மஞ்சம்" எனப்படும் கட்டிலில் நிறைந்த மலர்ப் படுக்கையின் மேல். புகுந்து புக்கிருந்து (கைக்கு ஒக்கப்புகும்) கையில் உள்ள பொருளுக்குத் தக்கபடிப் (புகும்) மனத்தைச் செலுத்தும் ஒப்பற்ற (தெரிவையர்) மாதர்களின் - அற்ப சிற்றின்பத் தெரிவையர் இழிவான சிற்றின்பப் போகம் தரும் மாதர்களின் பொய்யில் அகப்பட்டுச் சுற்றித்திரிகின்ற (புலையேனை) சண்டாளனாகிய ്TബT്ബTL' = பொற்பித்து அழகுபடுத்தி - எனக்குப் பொலிவு உண்டாக்கிக் (கற்பித்து) உபதேச மொழிகளைப் போதித்து, உன்னுடைய திருவடியை அருச்சித்துப் பூசிக்கச் சற்று கிருபை செய்வதும், என் புத்தியில் அந்த உபதேசம் நன்றாகச் சித்தித்துப்-பயன் தருவதான ஒரு பாக்கிய நாள் எனக்குக் கிடைக்குமா! திக்குக்குத் திக்குத் திகுதிகு தித்தித் திதியென நடனமாடும் சித்த மூர்த்தியாம் சிவனுக்கும், பரிசுத்தழுள்ள, மேலான, நல்ல ஜீவன் முத்தர்க்ளுக்கும், உள்ளத்தில் கிருபையுள்ள சித்த புருஷர்களுக்கும், பக்தர்களுக்கும் அருள்பாலித்த குருநாதனே! ஒக்க - ஒரு சேரத் (தக்கிட்டு) - நிலை பெற்றதாய்த் திரிந்து கொண்டிருந்த (முப்புரத்து) அசுரர்கள் (முட்டக்கொட்டு அற்று) எல்லாருடைய (கொட்டு) ஆர்பாட்டமும் அடங்கித் திரிபுரங்கள் ன்றும் ஒரு சேரக் (கெட்டிட்டு) அழிந்துபோய்த் திகுதிகு என்று குமபடி ಶಿ து) இதுவதி: சிவனுக்குக் (கற்பித்து) உபதேசம் செய்து, ர்களை ன்பட்ட iடங்கள் கொண்ட ఫే: హోప్స్తో கோழியாம் வெற்றிக்கொடி கொண்ட பெருமள்ளே! (அர்ச்சிக்க அருளுவ தொருநாளே)