பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டுப்பாடல்கள்

61


வீராதி வீரனோ வேந்தர்சூடாமணியோ
சீராமன் என்னும் திருநாமம் பெற்றானோ.

அலைகடல்சூழ் வையகத்தே ஆரும் அசைக்கஒண்ணாச்
சிலையை வளைத்தொடித்துச் சீதை மணம் செய்தானோ.

பத்து மணிமுடியும் பத்திரண்டு திண்கோளும்
தத்திவிழ எண்த தடம்பெரிய சேவகனோ

சீராம ராமனோ சீதை சிறை மீட்டவனோ
பேரால் பெரியவனோ பேருலகை ஆண்டவனோ.

சிதம்பரர் தாலாட்டு

(19 நூற்றாண்டு 30 கண்ணிகள்)

தானந் தழைக்கத் தரணியுள்ளோர் ஈடேற
ஆனந்தத் தாண்டவமாய் ஆடும் சிதம்பரனோ

வெண்ணலே வெண்மதியே வெண்குடையைத் தில்லைநகர்க்
கண்ணலுடன் கூடிவிளை யாடவா அம்புலியே

உம்பர் பெருமானே உமையாள்தன் நாயகனே
செம்பொன் மணிமன்றில் சிதம்பரரே கண்வளரீர்

பாலனென்று மார்க்கண்டன் பத்தி தனையறிந்து
காலன் தனையுதைத்துக் கால்கள் சிவந்தானோ

தேவி சிவகாமியுடன் சிதம்பரரே கண்வளரீர்
கோவில் பரிசனமும் கூடவே கண்வளரீர்

(இது முயன்று செய்த தாலாட்டாயிருப்பினும், சில நயங்கள் பொருந்தியிருக்கக் காணலாம்.)

குமரவேள் தாலாட்டு