பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

பாரதிதாசன்



(19 ஆம் நூற்றாண்டு 51 கண்ணிகள் எவ்வுளூர் ராமசாமிச்செட்டியார்)

காலின் மணிகள் கிண்கிணிகள் கல்லெனநன் கோலமிட
வேலும் அரன்தன் எண்டோள் ஏறிவளை யாடுமன்றோ

நாலா ரணம்பரவு நாரா யணனளித்த
வேலாயுதமெந்தும் வீரப்ர தாபமன்னோ

வீரமிகு தாருகனார் வெற்பாகக் கண்டுவைவேல்
சோரமற விட்டுத் தொளைத்துவெற்றி கொண்டவனோ

அன்பிற் புகழ்செல் அருணகிரி நாதர் தமக்கு
இன்பமைநற் பேறளிக்கும் ஏர்ப்பரங்கி ரிக்கரசோ

வன்பிணிதாரித்திரம்பேய் மாமலடு கூன்செவிடு
துன்பூமை நீங்கியுய்யத் தூய்வரந்தந் தாள்பரனோ

சிறுத்தொண்டர் வில் பாட்டு

(19 ஆம் நூற்றாண்டு)

ஆராரோ ஆராரோ ஆணரசே ஆராரோ
சீராரும் எங்கள் குல தீபமேநீ ஆராரோ

சீர்மேவு மாமணியே தேடக்கிடையா அன்னமே
பார்மேவும் கண்மணியே பாலகனே கண்ணுறங்காய்

வர்ணமணித் தொட்டிலிலே வாய்த்த மெத்தை மீதிலேநீ
கட்டிக் கரும்பே என்கணுவில்லாச் செங்கரும்பே

ஆலைக்கரும்பே என்றன் ஆரமுதே கண்ணுறங்காய்
அன்னக்கொடி பறக்கும் அன்பனது மேடையிலே