பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அவரைப் போலவே!

ஸ்ரீராமாநுஜலு நாயுடு கதை செல்லுவதில் சமர்த்தர். பாத்திரங்கள் உயிர்த் தன்மையுடன் இயங்குபவை. பெண்களைப் பற்றியும் அவர் கொண்டிருந்த கருத்துக்கள் விபரீதமானவை. கலையைப் பற்றியும் பெண்மையைப் பற்றியும் டால்ஸ்டாய் விசித்திர அபிப்பிராயங்களைத்தான் கொண்டிருந்தார். அதற்காக அவர் சிறந்த கலைஞன் என்பதை நாம் மறந்து விடுகிறோமா? அம் மாதிரியே ராமாநுஜலு நாயுடுவை நாம் பாவிக்க வேண்டும்.

சிறுகதை இலக்கணம்

சிறுகதை என்றால் அளவில் சிறியதாக இருப்பது என்பதல்ல; எடுத்தாளப்படும் சம்பவம் தனி நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்.

கவிதை எது?

கவிதையைப் போதனைக்குரிய கருவிசாக உபயோகப்படுத்தும் வரை அது கவிதையாக இருக் காது. அதன் ரசனை கெட்டு விடுகிறது.

இசைதான் கவிதையா?

ஒழுக்கமும், தர்மமும், மோட்சமும் கவிஞனது உள்ளத்தில் ஊறி, இருதயத்தின் கனிவாக வெளிப்படும் இசைதான் கவிதையாகும்.

47