பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இந்தச் சமுதாயப் பின்னணிச் சித்திரத்தில் (Social setting) புதிய பார்வையுடன் கூடிய வரலாற்றுப் பெருமை இழைந்த தேசிய விடுதலை இயக்கத்தின் கதையையே தம்முடைய கதைக்குப் பின்னணியாகக் கொண்டு தமது அதீதமான தனித் தன்மையினாலும் (Unusual individuality) ஆற்றல்மிக்க கற்பனைத்திறனாலும் (Powerful imagination) எழுதி, இந்தப் பெரிய நவீனத்துக்கு அமரத்வம் அளித்துவிட்டார் அமரர் கல்கி.

“The novelist must dramatise என்ற ஹென்றி ஜேம்ஸின் (Henry James) கொள்கையை முற்றும் பிரதிபலிக்கிறது. ‘அலை ஓசை’!

முகமூடி, பர்தா, தாடிமீசை, பாலசந்யாசி வேடம் போன்ற சாதாரணமான சாதனங்கள் ஒரு பிடிப்புடன் பயன்படுத்தப்படுகின்றன!

கல்கியின் தனித்துவம் (personality) அலாதி!

“சோலைமலை இளவரசி”யில் முற்பிறப்பு உணர்வைச் சித்திரிக்கும் ‘கல்கி’ அவர்கள் ‘அலைஓசை’யிலும் சீதா மூலம் மேற்படி தத்துவத்தைக் கையாளுகிறார்.

பிரெஞ்சு நாவலாசிரியர் அலெக்ஸாண்டர் டுமாஸ் (Alexander Dumas) அசல்— நகல் என்ற அளவிட்டு இரண்டு இரண்டு பாத்திரங்களைப் படைப்பதில் ஆர்வம் கண்டவர். ‘The man in the Iron Mask’ இதற்கு எடுத்துக்காட்டு.

இந்த ஆர்வம் நம் கல்கி அவர்களுக்கும் தழைத்தது போலும்!...‘சிவகாமியின் சபதத்’தில் நாகநந்தி-புலிகேசி! பொன்னியின் செல்வனில் மதுராந்தகன்-சேந்தனமுதன்! ‘அலைஓசையில்’ தாரிணி-சீதா!

42