தொடர்கிறது. சூர்யாவை மாறுவேடங்கள் அணைகின்றன.
தேசிய இயக்கத்தில் காட்டிய ஈடுபாடு காரணமாக,லலிதாவின் கணவன் பட்டாபிக்குச் சிறைத்தண்டனை கிடைக்கிறது.
புதுடில்லியில், சீதாவின் இல்லற வாழ்க்கை நாளுக்கு நாள் நரகமாகிறது. இதற்குக் காரணம் தாரிணிதான் என்பதாக அவளைச் சீதா வெறுக்கிறாள்.
தொடக்க நாளிலிருந்து மனம்தொட்டுப் பழகியவர்கள் சீதாவும் லலிதாவும். இருவருக்கிடையே தூதுப்பணி புரிந்த கடிதங்கள், சீதவுக்கு ஆறுதல் தருவனவாக அமைந்தன.
ஒருநாள் இரவிலே, சீதா கைத்துப்பாக்கி கொண்டு சுட்டுக்கொண்டு சாக முயற்சி செய்த வேளையில், சூர்யா வந்து அவளைக் காப்பாற்றுகிறான். தன்னால் இனிமேல் தன் கணவனுடன் வாழ முடியாதென்றும், தன்னை எங்கேயாவது அழைத்துச் செல்லும்படியும் அவள் சூர்யாவிடம் கெஞ்சுகிறாள். அவன், அவளது பேதை நெஞ்சத்திற்குப் புத்திமதி சொல்லுகிருன்.
சூர்யாவும் சீதாவும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதன் விளைவாக, ராகவனின் மனத்தில் கோளாறு விளைகிறது! சூரியாவைச் சட்டத்தின் கைகளிலே ஒப்படைக்கக் கங்கணம் கட்டுகிறான்.
11