பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
செல்வத்தின் தீமை!

நம்மவருக்குச் செல்வத்தின் தீமையைப்பற்றிச் சொல்லுவது. நபும்ஸ்கனுக்கு பிரமச்சரியத்தின் உயர்வைப் பற்றி உபதேசிப்பது போல்தான்.

எது நிலையானது?

செல்வம் நிலையில்லாதது என்று கடிந்து கொள்ளுகிறீர்களே! எதுதான் உலகத்தில் நிலையாக இருக்கிறது?

நம்மைப் போல்தான்!

கடவுளைப் பற்றி வெகுலேசாக, எப்பொழுதும் இருக்கிறார் என்று கையடித்துக் கொடுப்பார்கள். நம்மவர்கள், கடவுளும் நம்மைப்போல், பிறந்து வளர்ந்து அழிகிறவர்தான்.

அசட்டு வேதாந்தம்

அந்த ட்ராம் கார் நண்பர் மாதிரி. நமக்கு அசட்டு வேதாந்தம் வேண்டாம். அஸ்திவாரக் கப்பிகளை நன்றாகக் கட்டிவிட்டுப் பிறகு மெத்தைக்கு என்ன வார்னிஷ் பூசலாம் என்று யோசிக்கலாம்.

வீணையும் விரலும்

இருவர் வாழ்க்கையும் வீணையும் விரலும் விலகியிருப்பது போன்ற தனிப்பட்ட கூட்டு வாழ்க்கையாக இருந்தது.

49