பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அன்பு இல்லையா?

‘ஸ்தோத்திரம்’ என்று வார்த்தை வராது. அதற்கென்ன? உள்ளத்தைத் திறந்து அன்பை வெளியிடும்பொழுது தப்பிதமாக இருந்தால், அன்பில்லாமல் போய்விடுமோ?

‘சும்மா’ இருக்க மாட்டார்கள்

தெய்வத்தின் அருளைத் திடீரென்று பெற்ற பக்தனும், புதிதாக ஒரு உண்மையைக் கண்டு பிடித்த விஞ்ஞானியும், ‘சும்மா’ இருக்க மாட்டார்கள். சளசளவென்று கேட்கிறவர்கள் காது புளிக்கும் படி சொல்லிக் கொட்டி விடுவார்கள்.

‘செல்வோம்! செலவோம்!’

இந்தச் ‘செல்வம்’ என்ற சொல் ‘செல்வோம் செல்வோம்’ என்ற பொருள்பட நின்றதாம். அதிலே தமிழுக்கு வேறே பெருமை.

வண்டிச் சக்கரம் போல

‘செல்வம் இருக்கிறதே, அது வெகுபொல்லாதது. இன்று ஒரு இடத்தில் இருக்கும், நாளை ஒரு இடத்தில் இருக்கும்; அதோ அந்த வண்டிச் சக்கரம் போல. அதைத் துறந்தால்தான் மோட்சம்...’

42