11
"மூஞ்சியைப் பாரு. புருவத்தைச் சிரைச்சுக்கிட்டு ...கண்றாவி...” சாமியார் குமாருவிடம் முணுமுணுத்தார்.
பக்கோடா வாசனைக்கு நாய் ஒன்று ஓடிவந்தது.
"பக்கோடா வாசனையை நல்லா மோப்பம் புடிப்பே. திருடன் வந்தா கோட்டை விட்டுடுவே. இந்தா, தொலை..."
மீண்டும் வானத்தில் விமானம் பறக்கிற சத்தம். சாமியார் நிமிர்ந்து பார்த்து விட்டுத் திரும்பும் போது கொடிக் கம்பம் அவர் பார்வையில் பதிந்தது. அதில் மூவண்ணக் கிழிசல் கொடி ஒன்று தன் கட்சியின் பரிதாப நிலையை உணர்த்திக் கொண்டிருந்தது.
"இந்த ஊர் கட்சித் தலைவன் மாலை போட்டுக்க வருவான். வோட்டுக்கு வருவான். வசூலுக்கு வருவான். நீட்டா அங்கவஸ்திரம் போட்டுக்குவான். இந்தக் கொடியை ஒருநாளாவது நிமிர்ந்து பார்ப்பானா? ஏன் பின்னே கட்சி இந்த கதிக்கு வராது?” சாமியார் உறுமலோடு சிரித்தார்.
அடுத்தாற்போல் நாட்டாமைக்காரன் வந்தான்.
"என்ன சாமியாரே! உஷ்ணத்துக்கு மருந்து கேட்டேனே. வச்சிருக்கியா?"
"இந்தா" என்று அந்தச் சீட்டை எடுத்துக் கொடுத்தார் சாமியார்.
"இதைப் படி; உஷ்ணம் குறையும். காலண்டர் கேட்டேனே. எங்கே?"
ஒய்.விஜயா போட்ட காலண்டரை எடுத்துக் கொடுத்தான் நாட்டாமைக்காரன், அந்தக் காலண்டர் சுருளுக்