13
13
பரம : (செல்வரங்கத்திடம் அதைக் கொடுத்து) ஆறு மாசத்திலே, சம்பா
அறுவடையிலே பணத்தைக் கட்டிப்போடுவேனுங்க,
செல்வ: ஒங்க சௌகரியம்போல போல மெதுவா கொடுங்க. பரமசிவம் இந்தக் கொடுக்கல் வாங்கல் இருக்கே, விவசாயத்துக்கு வியாபாரத்துக்கு மட்டுமில்லே நம்மோட குடும்ப வாழ்க்கைக்கும் அவசியமானதுங்க
பரம: அதெப்படிங்க?
செல்வ: நீங்க ஒரு கல்லூரி மாணவரோட தகப்பன், நான் அழகான பெண்களோட தகப்பன். நாம்பரெண்டுபேரும் கொடுக்கல் வாங்கல் வச்சுகிட்டா அதுகளோட குடும்ப வாழ்க்கை பாலும் தேனும் கலந்துதுபோல இனிக்காதா என்ன?
(தட்டில் காபிகொண்டு வருகிறான் முத்தன்)
முத்தன்: கசப்பும் இனிப்பும் கலந்தது போலவும் இருக்குமுங்க!
பரம:என்னடா முத்தா! ஐயா நல்ல சேதி சொல்லும்போது நீ கசப்பைப் பத்திப்பேசறே?
செல்வ: கசப்பும் இனிப்பும் எப்படியடா கலக்கும்? கலந்தாலும் அது எப்படிச் சுவையாக இருக்கும்?
முத்தன்: தோ! திக்காக்ஷனும் சர்க்கரையும் கலந்த இந்தக் காப்பியைப் பாருங்க. இது சுவையா இருக்கும். சந்தேகமிருந்தா குடிச்சிப் பாருங்க.
இளங்: பலே! முத்தன் பேச்சிலே நீயொரு சித்தனப்பா. ஐயா எடுத்து கொள்ளுங்கள். முத்தன் போட்ட காப்பிலே முழுச்சுவையுமிருக்கும்.
(எல்லோரும் காபி டம்பளரை எடுக்கின்றனர்.)
காட்சி - 6
இடம்: கமலவேணி வீடு.
காலம்: இரவு.
(கமலவேணி, தாழம்பூ இளங்கோ ஆகியோர் இருக்கின்றனர்.)
கமல:இளங்கோ ! கருத்தைச் சொல்ல வேண்டுமென்பதற்காகவே இந்த நாடகத்தை நாம் தயாரிக்கிறோம்.
இளங் : குடும்பத்திற்கா எங்கள் கல்லூரி ஆண்டு விழாவுக்கல்லவா
நான் கேட்டேன் ?
கமல : குடும்பத்தில் பிறந்தோர்தானே கல்லூரி மாணவர்கள் ? கல்லூரிக் கலை நிகழ்ச்சிகளில்தானே குடும்ப வாழ்வுக்கான நல்ல கருத்துக்கள் இடம்பெறவேண்டும், இல்லையா ?
இளங் : ஆமாம், ஆமாம். நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்றாரே புரட்சிக் கவி பாரதிதாசன் !
தாழம்: கலைக்குச் சிறந்த கருத்துத் தேவை. கருத்தை வெளியிட நல்ல இடமும் தேவை.
இளங்: கருத்தும் இடமும் மட்டும் போதுமா?