பக்கம்:பதினாறும் பெறுக.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

38

35

செல்வ. என்னோட பேச்சிலே எந்த அநியாயத்தையடா கண்டே ?

முத்தன் : ஒவ்வொருத்தரும் பதினாறு கொழந்தைகளைப் பெத்துப் பெரிய குடும்பமா வாழணும்கிறது ஒங்களோட கொள்கை இல்லிங்களா ?

செலவ : ஆமாம்.

முத்தன்: அதுக்காக, கல்லூரி விழாவிலே கலவரம் பண்ணினீங்க. தாழம்பூவோட கல்யாணப் பேச்சிலே, அதை ஒரு நிபந்தனையாவே போடவச்சீங்க. பெரிய குடும்பத்தை விரும்பற நீங்க, ஒங்க மகளை பெரிய குடும்பத்திலே கொடுத்து வாழவைக்கறது தானுங்களே நியாயம் ?

செல்வ: ஆமா, ஒத்துக்கறேன்.

முத்தன் : உங்க மகளுக்கு குடும்பத்தைத் தேடறது கொள்கைக்கு விரோதமில்லியா ? மத்தவங்க எப்படியோ நாசமாவட்டும், நம்ப மகள் நல்லாப் பொழைக்கணும்கிற சுயநலந்தானே இதுக்குக் காரணம் ?

செல்வ: (வருந்தி) முத்தா நான் வெளியே எப்படிப் பேசினாலும் எவ்வளவுதான் பணக்காரனாக இருந்தாலும், அளவுக்கு மேலே புள்ளைகுட்டிகளைப் பெத்துவிட்டு அதனாலே நான் படற வேதனை அது நரக வேதனைடா முத்தா! நரக வேதனை.

முத்தன் : அப்படீன்னா, நீங்க யோக்கியரா இருந்தா அதிகமா பெத்து கிட்டு அவஸ்தைப்படாதீங்கன்னு மத்தவங்களுக்கு சொல்லணும். உற்பத்தியைப் பெருகவச்சு ஊரயல்ல கெடுக்கறீங்க!பணக்காரங்க நெலையே இதுவானா, ஏழைகளோட கதி என்ன ஆகிறது ?

செல்வ : முத்தா! நீ என்னைத் திட்டு, வையி, பேசு, கேட்டுக்கறேன். எப்படியாவது எம்மகளோட கல்யாணத்தை மாத்திரம் முடிச்சுப்போடு எனக்கு அதுதான் வேணும்.

முத்தன்: அது சரி, எது எப்படிப் போனாலும் போவட்டும். ஒங்களுக்கு அதுதான் வேணும். ஆனா, சின்ன எசமானோட முடிவு என்ன தெரியமுங்களா ?

செல்வ : என்னடா அவன் முடிவு ?

முத்தன் : என்ன சொன்னாலும் சரி, எதைக் கொடுத்தாலும் சரி. ஒங்க மகள் சண்பகத்தை மட்டும் கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லையாம் !

செல்வ : ஆங் அப்படியா சொல்லிப்போட்டான்? உம்....(யோசித்த வண்ணம் உலாவி) முத்தா அது போவட்டும். மனைவியில்லாத பரமசிவமாவது ரெண்டாந்தாரமா என் மகளைக் கட்டிக்கட்டும். அதுக்காவது ஏற்பாடு செய்யடா எப்படியும் அவள் இந்தக் குடும்பத்திலே வாழ்க்கைப் பட்டுட்டாபோதும்

முத்தன் : அதுக்கும் வழியில்லீங்களே.

செல்வ: ஏண்டா முத்தா ? மனமிருந்தா மார்க்கம் கொஞ்சம் பாருடா !

முத்தன்: எசமானுக்கு ஏற்கனவே ரெண்டாந்தாரம் ஆயிட்டுதுங்க.

செல்வ: அப்படியா யாருடா அவ? கல்யாணம் எப்ப நடந்தது ? யாருக்குந் தெரியாதே !