பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73


அம்பால் தம் கண்ணைத் தோண்டிக் கடவுள் சிலையில் உள்ள கண்ணின்மேல் பதித்தார் என்பது வரலாறு: இந்த வரலாற்றைப் பற்றிச் சேக்கிழார் என்னும் பெரியார் பெரிய புராணம் என்னும் நூலில் பாடியுள்ளார். இவ்வரலாற்றுப் பகுதி அமைந்துள்ள பாடல்கள் வருமாறு :* [1]


“ மற்றவர் பிசைந்து வார்த்த மருந்தினால் திருக்காளத்திக்
        கொற்றவர் கண்ணில் புண்ணிர் குறைபடா திழியக்
கண்டும் இற்றையின் கிலைமைக் கென்னோ இனிச்செயல் என்று பார்ப்பார்
       உற்றநோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரை முன் கண்டார்’

“ இதற்கிணி என்கண் அம்பால் இடங்தப்பின் எந்தையார் கண்,
         அதற்கிது மருந்தாய்ப் புண்ணிர் கிற்கவும் அடுக்கும் என்று.
மதர்த்தெழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன்னிருந்து தங்கண்
         முதற்சரம் அடுத்து வாங்கி முதல்வர்தம் கண்ணில் அப்ப,


என்பன பாடல்கள். இதனால், ஊனுக்கு ஊன் என்னும் உறுப்பு மாற்று மருத்துவ முறையைப் பண்டைக் காலத்தினரும் அறிந்திருந்தனர் என்பது புலனாகலாம்.


ஊனுக்கு ஊன் தரும் முறை வேறு விதமாகவும் எளிய முறையிலும் செய்யப்படுவதும் உண்டு. இம்முறை பண்டு தொட்டு இன்று வரை பழக்கத்தில் உள்ளது. அஃதாவது :- ஒருவருக்குக் கால்கள் வலுக் குறைந்ததால்


  1. பெரிய புராணம்-கண்ணப்ப நாயனார் 177-178: