பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


துக் கொள்ளினும், அடுத்த பிறவியில் தப்பவே முடியாது என அஞ்சிச் சிலர் தீவினைகள் புரியத் தயங்கலாம்.


இரண்டாவது : எவ்வளவு விடாது மேன்மேலும் முயன்றும் காரியம் கைகூடாதபோது, [1] “கிட்டாதாயின் வெட்டென மற”-என்னும் ஒளவையின் அறிவுரைக்கு இணங்க, நமக்கு உள்ளது இவ்வளவுதான்- வருந்த வேண்டியதில்லை’ என மன அமைதி கொள்ளச் செய்வ தாகும். இதனை - ஒருவகை ஆறுதலாகக் கொள்ள வேண்டுமே ஒழிய, மற்று, ஊழ்வினையையே முழுதும் நம்பி, நமக்கு வரவேண்டும் என்று ஊழ்இருப்பின் தானே வரும் என்று எண்ணிச் செயல் ஒன்றும் புரியாது வறிதே சோம்பியிருப்பது மடமையினும் பெரிய மடமையாகும்:


ஊழ்வினைக்கு மாற்று

நல்லவர்க்குத் தீமையும் தீயவர்க்கு நன்மையும் ஏற்படும் எதிர்மாறான விளைவுகளுக்கு ஊழ்வினை என ஒன்று காரணமாக இருக்க முடியாதெனில், இதற்கு மாற்றுக் காரணம் உண்டா என ஆய்வு செய்யவேண்டும். மாற்றுக் காரணங்களாக என்னென்னவோ சொல்லலாம் எனினும் அவற்றை வகைதொகை செய்து நறுக்காக மூன்று காரணங்கள் உள எனலாம், அவை :-

(ஒன்று) சமுதாய அமைப்பின் சீர்சேடு; (இரண்டு) அரசு முறையின் குறை; (மூன்று) தற்செயலான சூழ்நிலை ஆற்றல்- என்பனவாம்.


சமூகச் சீர்கேடு

இவற்றிற்குச் சிறு சிறு விளக்கமாவது வேண்டி யுள்ளது. முதல் காரணத்தின் விளக்கம் : பலவகை


  1. கொன்றைவேந்தன் 16