பக்கம்:பதினாறும் பெறுக.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

24

24

க. தலைவர்: இல்லை.

செல்வ: கொடிக்குக் காய் பாரமா ?

தலைவர் : இல்லை, இல்லை.

செல்வ: பெற்றெடுத்த குழந்தை தாய்க்குப் பாரமா?

க . தலைவர் பாரம் மட்டுமல்ல, அதிகமானால் பெரும் பாரம். சுமக்க

முடியாமல் கழுத்தே ஒடிந்துவிடும்.

செல்வ: எப்படி?

க. தலைவர் : மரமும், கொடியும் அறிவற்ற தாவர வர்க்கம். பிறர் உதவியால் வாழ்பவை. பெண் அறிவு படைத்த மனித வர்க்கம். தன்னுழைப்பால் வாழ்பவள். மரத்தையும் மனித வர்க்கத்தையும் ஒன்றாகக் கருதுபவன் விழிகண் குருடன் அல்லது விபரீதப் போக்கனாக இருக்கவேண்டும்.

செல்வ: (சினந்து) சே! உங்கள் விழாவும் கெட்டது; நாடகமும் கெட்டது,

நீங்களும் கெட்டிங்க! -

(வேகமாகப் போகிறார்)

பரம: (எழுந்து) டாய் முத்தா!

முத்தன்: எசமான்! பரம இதென்னடா வம்பாப் போச்சு வாடா, வா போயி அவரை சமாதானப் படுத்துவோம்.

முத்தன்: வாங்க எசமான் வாங்க பட்டுச் சேலை கட்டின பெண்டாட்டி திருவிழாவுக்குப் போனா, புருஷங்க முக்காலியைத் தூக்கிக் கிட்டுப் பின்னாடியே போகவேண்டியது தானே?

(இருவரும் வேகமாகப் போகின்றனர்)

காட்சி 9

இடம்: தெரு

காலம் : இரவு

(செல்வரங்கம், பரமசிவம், முத்தன் மூவரும் வருகின்றனர்)

செல்வ:பரமசிவம் கல்லூரித் தலைவர் பேசினதைப் பத்திக்கூட நான் கவலைப்படலே அந்தப் பாட்டுக்காரி மகளோட நம்ப இளங்கோ காதல் பண்ணினதும், கைகோத்துகிட்டு ஆட்டம் போட்டதும் எனக்குக் கொஞ்சம்கூட பிடிக்கலேங்கிறேன்!

முத்தன்: அப்ப அவலை நெனச்சிகிட்டு ஒரலை இடிச்சிருக்கீங்க எசமான்!

பரம: டாய் முத்தா பெரியவங்க கோபத்திலே இருக்கிறப்போ,அதையும் இதையும் பேசாதேடா!

செல்வ: பரமசிவம் முத்தன் சொல்றது ரொம்ப சரி. அந்தக் கமல வேணி மேலே வந்த கோபத்தைத்தான் கல்லூரித் தலைவன் மேலே விசினேன். இந்தக் காதல் நாடகத்தை என்னோட மகள் சண்பகம் பாத்திருந்தா என்ன நெனச் சிருப்பாள்?

முத்தன்: இந்தப் புருஷன் எனக்கு வேணாம்னு சொல்லி இருப்பாங்க எசமான்.