பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெண்ணின் தகப்பனார் நல்ல உழைப்பாளி. வேலைசெய்து ஓய்கிற அனுபவம் அவருக்கு.

அன்றே சீதாராமனைப் போலீஸ் தேடிவருகிறது விஜயபுரம் அக்கிரகாரத்துக்கு தவறே செய்யாத நல்லவன்போல் போலீசாருடன் செல்கிறான் சீதாராமன், நளினியை விரும்பிய சீதாராமனும் சீதாராமனை மனத்தில் எண்ணிக் கலந்த நளினியும் சீதாராமனுக்காக வருந்திய அவன் அக்காளும் தபால் குமாஸ்தாவான நளினியின் தந்தை விஸ்வநாதய்யரும் குழம்பி நிற்கிறர்கள்.

பட்டினத்துப் பாங்கிலே இருபதினாயிரத்தைக் கொள்ளையடித்து சட்டத்தின் பிடியில் குருசாமி என்கிற எத்தனைப் பழிசாட்டி, சீதாராமன் நல்லவனாகித் தப்புகிறான். ஆனால் இருபதினாயிரத்தில் பங்குக்காகத் தன்னருகிலேயே காத்திருந்த எத்தன் குருசாமியை சீதாராமனால் உணரமுடியவில்லையே!

விஜயபுரம் வருகிறான். தன் அக்காள் வீடு பூட்டியிருக்கிறது. எதிரே நளினி நிற்கக்கண்டு திகைக்கிறான். பின்பு நளினியிடம் பேசுகிறான். நளினியின் வீட்டில் அவனுக்கு இடம் கிடைக்கிறது. ஆனால் குருசாமி திண்ணைக்கு வந்து

விட்டதை அவன் அறிந்தபோது, நளினியிடம்கூடச் சொல்லாமல் - பெட்டிகூட எடுத்துக்கொள்ளாமல் ஓடிவிடுகிறன்!-நளினி நிலைக்கிறாள்!

87