பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சூர்யா-தாரிணி ஆகிய இருவரும் நாட்டு விடுதலைப் பணியில் இறங்கிப் பல இன்னல்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்கின்றனர்.

ஒரு முறை, தாரிணி என்று மயங்கி, சீதாவைக் கைப்பற்றிய முரடர்கள் சிலர், அவளைச் சுதேச மன்னர் அரண்மனை ஒன்றுக்குக் கொண்டு செல்கிறார்கள். தாரிணி ரஜனிபூர் இளவரசி என்னும் மர்மம் புலனாகிறது!

இதற்கிடையில் சீதா வேறு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்க் கைது செய்யப்படுகின்றாள். இவள் சிறைப்பட்ட விபரம் அறிந்தும், ராகவன் அவளைப்பற்றித் துளிகூட முயற்சி எடுக்கவில்லை.

காலம் ஓடுகிறது; சுவையான நிகழ்ச்சிகள் தொடர்கின்றன!...

சீதா, ராஜம்பேட்டைக்கு வருகிறாள். பட்டாபியும் சீதாவும் வெள்ளை உள்ளத்துடன் பழகுவதைக் காண, லலிதாவின் பெண்மனம் பேதலிக்கிறது. உயிருக்குயிராக மதித்தவளை ஏசுகிறாள். பின்னர் குழப்பங்கள் மறைகின்றன.

சீமைக்குச் சென்றிருந்த ராகவன் திரும்பினான். ரஸியா பேகத்தின் வரலாறும் தாரிணியின் கதையும் விளங்குகின்றன. கங்காபாய்- ரமாமணியின் விபரங்களையும் சூர்யா கூறுகிறான் ராகவனிடம். சீதாவின் தந்தையாகிய துரைசாமியின் வேடங்களும் அம்பலமாகின்றன.

12