பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 மா தவம் புரிவாள் ‘இவன்வேறு வந்துவிட்டானே-எப்பொழுது தொலைவான்? என்று வெறுக்கக்கூடிய நிலையில் அடிக்கடி வந்து ஆணி யடித்துக்கொண்டு அமர்ந்து விடுபவர்களைப் பார்த்து இப்படி யாரும் கேட்பதில்லை. நீண்ட நாட்களாக வராமல், எப்போதோ ஒருநேரம் அரிதாக வந்து தலையைக் காட்டிவிட்டுப் போனவர்களை நோக்கியே இப்படிக் கேட்பது உலக வழக்கம். அரிதாக வருவதற்கும் அத்தி பூப்பதற்கும் என்ன ஒப்புமை? ஆராய்வோம். நாம் சிறுவராயிருந்த போது அத்திப் பூவைப் பற்றி என்னென்னவோ கேள்விப்பட்டிருக்கிறோம்-சிறுவர்களோடு பேசிக் கொண்டு இருந்திருக்கிறோம். ஏன்-எப்போதுமே பலர், சிறு வயதில் பேசிக்கொண்ட-கேள்விப்பட்ட அதே அளவில்தான் உள்ளனர்! 4.1 அத்தி-வினா விடை "அத்திப் பூ பார்த்திருக்கிறாயா?" என்று கேட்பான் ஒரு சிறுவன். அத்தி மரத்தில் பூவே பூப்பதில்லை' என்பான் மற்றொரு சிறுவன். பூ இல்லாமல் எப்படி காய் காய்க்கும்? என்று கேட்பான் இன்னொருவன். "இருட்டினதும் பூத்து விடிவதற்குள் காய்த்துவிடும் என்று ஒரு பதில் வரும். அப்படி யென்றால் இதுவரையும் அத்திப் பூவை யாராவது பார்த்திருக்க வேண்டுமே என்று ஒரு கேள்வி புறப்படும். எல்லோரும் தூங்கிய பின்பு ಟ್ರಹಿಣ. எல்லோரும் விழித்துக் கொள்வதற்குள் காய்த்துவிடும். என்ற பதில் கிடைக்கும். அப்படி யென்றாலும் யாராவது ஒருவர் வேண்டுமென்றே இரவு முழுவதும் விழித்திருந்து கண்டுபிடித்திருப்பாரே என்ற கேள்வி எழும். பட்டைக் குள்ளே பூத்து, பிறகு காயாக வெளிப்படும் என்றோ அல்லது அது பூப்பதும் தெரியாது-காய்ப்பதும் தெரியாது; பூத்த மறுநொடியே காய்த்துவிடுவதால் யார் கண்ணுக்கும்