95
‘நீரின்று அமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது கிலத்தொடு நீரே
நீரும் கிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே’.
என்பது அந்தப் புறநானூற்றுப் பாடல் (18) பகுதி ‘மண்ணும் நீரும் கலந்ததே உடம்பு’ என்னும் குறிப்பு இதனால் கிடைக்கிறது.
உடம்பின் பொல்லாமையையும் நில்லாமையையும் கூறும் வகையில் சித்தர்கள் பாடியுள்ள பாடல்கள் சிலவும் உடம்பின் பரிணாமக் கொள்கைக்குத் துணை செய் கின்றன. பாடல் பகுதிகள் சில வருமாறு:
‘ஊத்தைக் குழியிலே மண்ணை எடுத்தே
உதிரப் புனலிலே, உண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
வரகோட்டுக்கும் ஆகாதென் றாடாய்:பாம்பே’
‘ இருவர் மண் சேர்த்திட ஒருவர் பண்ண
ஈரைந்து 10)மாதமாய் வைத்த சூளை
அருமையா யிருப்பினும் அந்தச் சூளை
அரைக்காசுக்கு ஆகாதென் றாடாய் பாம்பே’
(மேலுள்ள இரண்டும் பாம்பாட்டி சித்தர் பாடல்கள்)
‘காயமே இது பொய்யடா
காற்று அடைத்ததோர் பையடா
மாயனாம் குயவன் செய்த
மண்ணுப் பாண்டம் ஒடடா'’ .