பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

191



நல்ல, சிறந்த குடிப்பெருமை உடையவர்கள், தமக்குத் துன்பம் நேர்ந்து, பிறர்க்கு உதவமுடியாத நிலையிலும், துன்பங்களுக்கு இயல்பாக உள்ள பண்பு நலன்களில் தாழ்ந்துவிட மாட்டார்கள்.

வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று. (955)

மேலும், தீயவழிகளைக் கடைப்பிடித்துப் பொருள் திரட்டுதல், சுடாத பச்சை மண்சட்டியில் நீர் ஊற்றி வைப்பதற்கு ஈடானது. அந்த நீர், சட்டியையும் கரைத்துக் கொண்டு வெளியேறிவிடும் தன்மையைப் போல், எவ்வளவு காத்து வைத்தாலும் அப்பொருள், அக் காவலையும் உடைத்துக் கொண்டு வெளியேறிவிடும் தன்மையுடையது என்பது பேராசான் கருத்து.

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பகமட்
கலத்துள் நீர் பெய்திரீஇ யற்று - (660)

5. தவறான செயல்கள் வெற்றி பெற்றாலும் குற்றம் தரும்

இனி, இன்னொன்றை நாம் தவறாக எண்ணிக் கொள்கின்றோம். ஒரு செயலைத் தவறான வழிகளைக் கடைப்பிடித்து வெற்றியாகச் செய்து முடித்துவிட்டபின், அதனால் பிறகு தீங்கு வராது என்று நினைக்கின்றோம். அது சரியான முடிவன்று.

மாணவப் பருவத்தில் மிகவும் தொடக்கநிலைக் கல்வியில் கூட, தவறான் படிப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொடுத்து, அதன் அடிப்படையில் உயர்கல்வியும், மிக மேற்பட்ட கல்வியும் பெற்று, மிக மேற்பட்ட பணிகளுக்குப் போயிருந்த அதிகாரிகள் சிலர், பின்னர் நெடுங்காலம் கழித்துக் கண்டுபிடிக்கப்பெற்றுத் தாழ்ச்சியும் தண்டனையும் பெற்ற பல செய்திகளை உலகியலில் காண்கின்றோம்.

எனவே தவறான வழிகளைப் பின்பற்றி ஒரு செய்லை வெற்றியுடன் செய்து முடித்துவிட்டதாக எண்ணிவிட வேண்டாம் செயல் முடிந்து மிகவும் பிந்திய காலத்தில்கூட முன்னர் நல்விளைவை உண்டாக்க உதவிய தவறான செயல்கள், திடுமெனத் தீமைகளைத்தரும் என்று எச்சரிக்கை செய்வார், திருக்குறள் பேராசான்.

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும். (658)

7. குற்றத்திற்குக் காரணங்கள்

மாந்த இனத்தில் நேர்கின்ற குற்ற நடவடிக்கைகள் அனைத்துக்கும் பெரும்பாலும் மிகு ஆசை, பொறாமை பகையுணர்வு, வெறுப்பு, வறுமைத்