பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருவதிகை சுந்தரர் திருச்சிற்றம்பலம் தம்மானை அறியாத சாதியார் உளரே Thammaanai arriyaadha saadhiyaar ullarē சடைமேல்கொள் பிறையா விடைமேல் கொள்விகிர்தன் sadai mē lkoll pirraiyaanai vidaimēl koll vikirdhan கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல் Kaimmaavin uriyaanaik karikaattil aadal உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்து udaiyaanai vidaiyaanaik karraikonnda kanndaththu எம்மான் தன் அடிக்கொண்டுஎன்முடிமேல்வைத்திடும்என்னும் Emmaanthan adikkonnduen mudimēl vaiththidum ennum ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் aasaiyaal vaazhkindra arrivilaa naayēn எம்மானை ஏறிகெடில வடவீரட்டானத்து Emmaanai ērrikedila vadaveerattaanaththu உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே. urraivaanai irraipōdhum igazhvanpōl yaanē. தம் தலைவனை அறியாத மக்கள் இருக்கமுடியுமா? சடையின் மேல் பிறையை உடையவன்-இடபத்தின் மேல் சவாரி செய்பவன் யானைத்தோலைப் போர்த்திக் கொண்டவன் -சுடுகாட்டில் ஆடு பவன்- இடபக்கொடி உடையவன் - விஷக்கரை உள்ள கண்டத்தை உடைய தலைவன்-தன் திருவடியை என் தலைமேல் வைக்கும் என்னும் ஆசையால் வாழ்கின்றேன் - நான் அறிவில் லாத நாய் போன்றவன். எம்பெருமான்--அலைகள் மோதும் கெடில நதியின் வடகரையில் (திருவதிகை வீரட்டானத்தில் இருப்பவன் ஆகிய இறைவனைச் சிறிது பொழுது இகழ்ந்ததுபோல் யான் இருந்தேன் (அந்தோ). தம்மான் -- தம் தலைவன்-their master சாதியார் - மக்கள் - people சடை-mated locks