பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

1. க்ஷேத்திரபாலதேவர்

பாதாதிகேசாந்தம் முக்காலே அரைக்கால் முழ உயரத்து எட்டுத்திருக்கைகளை யுடையவர் ; இவர் எழுந்தருளி நின்ற பீடம் 9 விரல் சமசதுரத்துப் பத்மத் தொடும் கூடியது.

இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தன

திரள்மணிவடம் ஒன்று, பொன்கால் : சுருக்கின வீரபட்டம் ஒன்று, பொன் ஏழுமஞ்சாடி; திருக்குதம்பைத் தகடு இரண்டு, பொன் மூன்று மஞ்சாடி.

இந்த சேஷத்திரபால தேவரே சிறுத்தொண்டருக்குக் காட்சி கொடுத்த தேவராக எழுந்தருளுவிக்கப் பெற்றார் எனக்கோடல் பொருந்தும்.

2. பைரவமூர்த்திகள் திருமேனி

பதினெண் விரல் உயரத்து இரண்டு திருக்கை யுடையராய் ஆடுகிறாராக எழுந்தருளுவிக்கப் பெற்றது : இவர் எழுந்தருளி நின்ற பீடம் ஒன்பதிற்று விரல் உயரத்து எண்விரலகலத்துப் பத்மத்தொடும் கூடியது.

இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தன

திரள்மணிவடம் ஒன்று, பொன் 4 மஞ்சாடி : முப்பத்து மூன்று முத்துக்கள் கோத்த முத்துவடம் ஒன்று, நிறை அரைக் கழஞ்சே 4 மஞ்சாடியும் குன்றி : விலே காசு. 37 முத்துக்கள் கோத்த முத்துவடம் ஒன்று, நிறை எட்டு மஞ்சாடி ; விலே காசு.

3. சிறுத்தொண்ட நம்பி

பாதாதிகேசாந்தம் 17 விரல் உயரத்து இரண்டு

கையுடையவர்.