பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102



“நீங்க ஒண்ணு! ஒட்டலிலே நாலாவிதப் பலகாரம் என்ன வேண்டிக் கிடக்கிறது. அந்தக் காலத்து அரையனாத் திட்டு அளவு இட்டலி இப்போது ஐம்பது காசாம். காலனாத்திட்டு அளவு வடை எண்பது காசாம்! விலைவாசி என்ன அநியாயம் போங்கோ! அந்தக் காலத்திலே நான் சின்ன பையனாயிருந்தபோது, இதைவிடப் பெரிய இட்டலி-பெரிய வடை விற்கப்பட்டன. ஒரு ரூபாய்க்கு நூற்றுத் தொண்ணுாற்றிரண்டு இட்டலி-ஒரு ரூபாய்க்கு நூற்றுத் தொண்ணுற்றிரண்டு வடை-என்ன அற்புதமாயிருக்கும் தெரியுமா?

“அப்படியா! நீங்கள் சொல்வது ஒன்றும் விளங்கவில்லையே. ரூபாய்க்கு நூற்றுத் தொண்ணுற்றிரண்டு என்றால் என்ன ? புரியவில்லையே,’

‘அதுவா? இப்போது ஒரு ரூபாய்க்கு நூறு காசு(பைசா). அப்போது வெள்ளைக்காரன் காலத்தில்ரூபாய்க்கு நூற்றுத் தொண்ணுாற்றிரண்டு காசு. ஒரு காசுக்கு ஓர் இட்டலி-ஒரு காசுக்கு ஒரு வடை, அதைத்தான் சொன்னேன் - ரூபாய்க்கு நூற்றுத் தொண்ணுாற்றிரண்டு இட்டலி - ரூபாய்க்கு நூற்றுத்தொண்ணுாற்றிரண்டு வடை என்று?”

"சரி புரியுதுங்கோ! ஆபீசுக்கு நேரமாகிறது-நான் போய் வருகிறேன்”

“போகலாம் இருங்கோ! இதை மட்டும் கேட்டுவிட்டுப் போய் விடுங்கோ! அந்தக் காலம் எவ்வளவு நயத்தகாலம் தெரியுமா? பர்மா நொய்யரிசி ஒரு ரூபாய்க்குப் பட்டணம் படியாலே இருபது படி விற்றதுங்கோ!உளுந்து ரூபாய்க்குப் பட்டணம் படியாலே எட்டுப் படி! புளி, ரூபாய்க்குப் பதினாறு தூக்கு! பிண்ணாக்கு ஐந்து தூக்கு! சீயக்காய்ப் (சிகைக்காய்ப்) பொடி விலை ரொம்ப சரசம்! விளக்கெண்ணெய் விலையோ ரொம்ப-ரொம்ப சகாயம்!”