பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

புகழேந்தி நளன் கதை




“பார்த்தால் இவன் அரசனாகத் தெரியவில்லையே” என்ற மருட்சி ஏற்பட்டது.

உருவு கண்டு எதையும் முடிவு செய்ய இயலாது. உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.

“நடுகாட்டில் நள்ளிரவில் எந்த இடர்ப்பாட்டில் தனியள் அவள் அகப்பட்டு வேதனைப் படுகிறாளோ” என்று இரக்கம் தோன்றப் பேசினான்.

நளன் கண்களில் நீர் வெளிப்பட்டது. அவன் சோகம் அவனைக் காட்டிக் கொடுத்தது.

இவன் ஏன் கண்ணீர் விடுகிறான் என்று எண்ணிப் பார்த்தான். அவன்தான் நளன் என்பதை அறிந்து கொண்டாள்.

மேலும் கேட்டால் அவன் எங்காவது சென்று விட்டால் என்ன செய்வது? பார்த்து வா என்று சொன்னார்களே தவிர அழைத்துவா என்று யாரும் சொல்லவில்லை. அவன்தான் நளன் என்பதை அறிந்தான்.

“அவன் அவளை வெறுத்து ஒதுக்கி இருக்க மாட்டான். அவன் அவளை உயிரினும் மேலாக நேசித்தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவன் அவளைவிட்டு நீங்கினான் என்றால் அது பழைய வினை; விதியின் செயல்” என்று நளன் கூறினான்; “அவளை வெறுத்து நீங்கினால் அவள் அலைய நேரிடும்; அவன் விரும்பிச் செய்ய வில்லை” என்று மேலும் விளக்கம் தந்தான்.

அதற்குமேல் அவனுக்கு விளக்கம் தேவைப்பட வில்லை; அங்குத் தங்குவதைத் தவிர்த்து உடனே திரும்பினான்; தமயந்தியை அணுகினான். அவளைச் சந்தித்தான்; பேசினான். “கண்டனன் கற்பினுக்கு அணியைத்