பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



2. குறிஞ்சி மலர்
—நா. பார்த்தசாரதி—

தத்துவங்களிலே வாழும் பிறவி அரவிந்தன்; அச்சுக்கூடப் பொறுப்பாளன்; பதிப்பக அலுவலாளன்; ஆலவாய்த் திருநகரிலே, தமிழ்ப் பேராசிரியர் திருச்சிற்றம்பலத்தின் மகள் பூரணியின் கனவுக்குக் கருவாகிறான் அவன்.

ஒரு நாள் வெயிலின் வெம்மையிலே மயங்கி பசியின் வேகத்திலே துவண்டு மதுரை முச்சந்தியிலே விழுந்தாள் பூரணி! பிறந்தது கவிதை அரவிந்தனின் நெஞ்சினிலே. அந்தக் கவிதைகள் நிரம்பிய குறிப்பேடு ஒன்று அரவிந்தனுக்கு உயிர் தருகிறது. ஒட்டும் இரண்டுள்ளத்தின் மற்றோர் உயிரோ! தந்தையின் மறைவும் வறுமையின் பிடியும் புடம்போட வேலை தேடி அலைகிறாள் பூரணி. மாதர் சங்கத்து வேலை கிடைக்கிறது. மங்களத்தம்மாள் என்ற பணக்காரியின் உதவியிலே தந்தை தமிழ்ப் பேராசிரியரின் நூலை வெளியிடப் பதிப்பகம் காணும் முயற்சியிலே வலிய வருகிறான் அரவிந்தன்.

44