பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவனை ஆட்கொள்கிறது. ஆனால் தாரிணி ‘ஆட்கொல்லி’ யல்லள்!

தன் கணவனின் ‘மாஜிக்காதலி’ தாரிணி என்ற மர்மம் பிடிபடுகிறது சீதாவுக்கு. ‘யார் அவள்?’ என்று கேட்கிறாள், பதமாக. அவனே எரிந்து விழுகிறான். “இப்படி எரிந்து விழத்தான் உங்களுக்குத் தெரியும்! அன்பாக ஒரு சொல்கூடச் சொல்லத் தெரியாது!” என்று மெய்யுருகினாள். ‘மெய்’யும் உருகுகிறது.

‘தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ ?’

இல்லறப் பிணைப்பில் ஏற்பட்டிருந்த விரிசலைக் காணும் சூர்யாவுக்கு மேற்கண்ட வரிகள் தாம் நினைவில் எழுகின்றன. அவர்களது இன்பமயமான இல்வாழ்க்கையில் துளி விஷமாகத் தோன்றுகிறாள் தாரிணி.

தாரிணி ஹரிபுரா காங்கிரஸில் பங்கு கொண்டவள். பீஹார்ப் பூகம்பத்தின்போது, பொதுநலத்தொண்டு புரிந்தவள்.

இலட்சியவாதி சூர்யாவுக்கும் தாரிணி பழக்கம்!

இறைமையின் வாழ்வு !

னித மனத்தை வாழவும், வாழ்த்தவும் செய்யவல்ல வல்லமை-கடவுட்சக்தி எனும் மூலசக்தியிடமிருந்தே கிடைக்கிறது. இதனால் தான் அன்பு எனும் உயிர்நிலை நிலைக்கிறது; அறம் என்கிற நியதி காலூன்றுகிறது; தர்மம் வெல்கிறது. ஆகவேதான் இறைமையே வாழ்வாகவும், வாழ்வே இறைமையாகவும் சுழல்கிறது!...

29