பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தியாகத்தின் இட்சணமும் இலட்சியமுமே 'சுகம்' என்ற பண்பட்ட பண்பாட்டுணர்ச்சியின் பால் அமைந்த அமைக்கப்பட்ட செயலே அல்லவா? -

இல்லையென்றால், இறுதிக் கட்டத்திலே, அவள் முகத்தில்-அமரன் அரவிந்தனுக்கே உடைமையாகிவிட்ட அந்தத் தமிழ்ப் பெண் பூரணியின் வதனத்தில்-உலகமெல்லாம் தேடினும் கிடைக்காத ‘சாந்தி’ நிலவ முடியாதே!...


திருமணமாகாத விதவை

பூரணி ஆரம்பித்துவைக்கின்ற ‘குறிஞ்சி மல’ரை அரவிந்தன் முடித்துவைக்கின்றான்.

இந்தப் புதினத்தில் ஒன்றை மட்டும் தெளிய முடிகிறது. இதன் கதை சிறிது; பக்கங்கள் அதிகம்.

நாயகன்: அரவிந்தன்.

நாயகி: பூரணி.

கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். ஆனால் வாயைத் திறக்கமட்டும் மறந்துவிடலாகாது!

இவ்வளவு பக்கங்களைச் சாப்பிட்ட இக்கதையின் கதை என்ன? அது இதுதான்: 1. சந்திப்பு. 2. மனப் பிணைப்பு: 8. பிரிவு. 4. மீண்டும் மனவாழ்வு. 5. சுபம்.

பூரணி யார்?

அவள் திருமணமாகாத விதவை (The un-married widow)

அரவிந்தன் யார்?

57

அ-4