பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

109



தெண்திரைக் கடல் அக்கரைக்கு அப்பால்” என்றான் அனுமன். அதுபோல் அந்தணனும் செங்கோல் வேந்தனைத் தன் கண்களால் கண்டதாக உரைத்தான். இதைக் கேட்டதும் அளவில்லா மகிழ்வு கொண்டாள். அவனைத் தூக்க முடிந்தால் தலைமீது வைத்துச் சுற்றிக் கீழே போட்டிருப்பாள். அவன் மண்டை சிறிது ஒட்டை விழுந்திருக்கும். அளந்து பார்த்து அடிபலமாக இல்லை என்று மருத்துவர் கூறிச் சான்று தந்திருப்பார்; அந்த எல்லைக்கு அவள் செல்லவில்லை.

அவனைத் தலையில் வைத்துக் கொண்டாடினாள்; அவனைப் போற்றிப் புகழ்ந்தாள். “எப்படிப் போனாய்? எங்குத் தங்கினாய்? எங்கு உணவு கொண்டாய்? எங்கு உறங்கினாய்? எப்படி எப்படிக் காலம் கழித்தாய்?” என்று அடுக்கி விசாரித்தாள்.

எப்பொழுதுமே கண்டிராத உபசாரத்தை அவன் காண நேர்ந்தது. அவன் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்தான். அதை இறக்க அவளுக்குக் காட்டக் காத்திருந்தான். அவள் அவசரப்பட்டாள்.

அவன் வாய்ச் சொல் உதிர்க்கும் முத்துகளைக் கோக்கக் காத்திருந்தாள். அவன் சொன்னான் “பேச்சினால் அவன் உன் மணாளன்தான்; ஐயமே இல்லை; ஆனால் உருவ மாற்றத்தால், வடிவால் அவன் அல்லன். வடிவைக் கொண்டு பார்த்தால் அவன் அடி ஐந்து உடையவன்; குறுமையன்; நளன் அல்லன்; இவனை நீ தேர்ந்து எடுக்க வாய்ப்பே இல்லை; மாலையிடுவதற்கு வேண்டிய மயக்கம் அவனிடம் சிறிதும் இல்லை. கோயில் நூறு சென்று சத்தியம் செய்வேன் அவன் நளன் அல்லன்” என்றான்.

“உணர்வு, உயிர், எண்ணம், நினைவுகள் எல்லாம் எடுத்துக் கொண்டால் அவன் நீ நாடும் அரசன்தான்;