பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

113



பணி இது; அதனை முடிப்பது தன் கடமை என்று தேரைக் கொணர்ந்தான்; பூட்டினான்; அரசன் ஏறினான், தேர் சென்றது.

தேரைக் கொண்டு வந்து நிறுத்தினான். “இதற்குச் சக்கரங்கள் இரண்டு இல்லை” என்றான் நளன்.

“ஏன் என்ன ஆயிற்று?”

“சூரியன் தேருக்கு ஒரே சக்கரம்; இதற்கும் ஏன் ஒரே சக்கரம் இருக்கக் கூடாது என்று மாற்றி விட்டேன்” என்றான்.

“சூரியன் பாதையில் செல்லவில்லை. அந்தரத்தில் செல்லும் தேர் அது; அதனால் ஒரு சக்கரம் போதும். இது தரையில் ஒடும் தேர்; இரண்டு சக்கரம் அவசியம்” என்றான் அரசன்.

நளன் வேறு வழி இல்லாமல் இரண்டு சக்கரம் உடைய தேரைக் கொண்டு வந்து நிறுத்தினான்.

“இதைக் கொண்டு சூரியனின் தேர் வேகத்தை யான் அமைத்துத் தருகிறேன்” என்றான்.

“சூரியன் இந்தப் பூமியைக் கடக்க ஒரு பகல் எடுத்துக் கொள்கிறான். யானும் ஒரே பகலில் அங்குப் போய்ச் சேர்ப்பேன்” என்றான்.

“இந்தத் தேர் சூரியன் தேருக்கு நிகரானது; ஏறுக” என்றான். அவனும் ஏறி அமர்ந்தான்.

அயோத்தி மன்னன் மன வேகத்தைவிட இதன் வேகம் மிக்கு இருந்தது என்பதை அரசனே ஒப்புக் கொண்டான்.

இது அவர்கள் பேசிய பேச்சின் சுருக்கம். அயோத்தி அரசனின் மேலாடை காற்றில் அசைந்து கீழே விழுந்தது.