பக்கம்:தமிழ் அங்காடி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  69


உலகியலில்கூட, என் கால் தூசுக்குச் சமமாகமாட்டான் - என் செருப்பு அடித் தூசுக்கு ஒப்பாகமாட்டான் என்று கூறும் வழக்காறு உண்டு. அதை ஒட்டிக் கம்பர் இந்தப் பாடலை வடித்துள்ளார்.

இந்த நேரத்தில் இராமன் வந்து, என்ன செய்தி என வினவ, அரக்கி நடந்ததைக் கூறினாள். இராமன் இலக்குவனை வினவ, அவன் இவ்வாறு செய்ததற்கு உரிய காரணத்தைக் கூறினான். அரக்கி இடைமறித்து, தான் சீதையைப் பற்றப் போனதற்கு உரிய காரணம் கூறித் தன் மேல் பிழை இல்லை என வலியுறுத்தலானாள்:

ஒத்தாள் ஓர் படியாள்

பெண் சங்கின் பக்கத்திலே தன் (பெண் தவளையின்) கணவனாகிய ஆண் தவளை இருப்பதைக் கண்டு, தன் கணவன் பெண் சங்கைக் காதலிப்பதாக எண்ணி, சூல் கொண்ட பெண் தவளை ஊடல் கொண்டு ஒலி எழுப்பிக் கலக்கும் நீர் வளம் நிறைந்த நாட்டை உடையவனே (இராமனே)! எந்தப் பெண்ணுக்கும், தன் மாற்றாளைக் கண்டால் உள்ளம் கொதிக்காதா - என்றாள்.

             "ஏற்றவளை வரிசிலையோன்
                 இயம்பாமுன் இகலரக்கி
             சேற்ற வளைதன் கணவன்
                 அருகிருப்பச் சினம் திருகிச்
             சூல்தவளை நீர் உழக்கும்
                 துறைகெழுநீர் வளநாடா
             மாற்றவளைக் கண்டக்கால்
                 அழலாதோ மனம் என்றாள்" (122)

வரி சிலை யோன் = இலக்குவன். இயம்பாமுன் = அவன் சொல்லி முடிப்பதற்குள் சேற்ற வளை = சேற்றில் உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/71&oldid=1202282" இலிருந்து மீள்விக்கப்பட்டது