பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


வர் ஒடுங்கினர் என்றும் கூறியுள்ளார்.[1] போர்க் களத்தினின்றும் மறைந்தோடிய கலிங்க வேந்தன் ஒரு மலைக் குவடு பற்றி அதில் மறைந்திருந்த பொழுது கலிங்க வீரர்கள் விடியுமளவும் அதனைக் காத்து நின்றதை தொழுவிலடைத்த காட்டுப் பன்றியை வேடர்கள் காத்து நிற்கும் உவமையால் பெறவைக்கிறார்.[2] நூலில் காணப்பெறும் இல் பொருளுவமை அணிகள், கூறும் பொருள்களை மிகவும் சிறப்பித்து நிற்கின்றன. குலோத்துங்கன் காஞ்சியில் சித்திர மண்டபத்தில் அரியணையில் வெண் கொற்றக்குடை நிழலில் வீற்றிருந்த பொழுது இருபாலும் கவரி வீசப்பெறும் சிறப்பிற்கு, பாற்கடலின் அலை இரு புறத்தும் நின்று பணி செய்யும் தோற்றத்தை உவமையாக வைத்துள்ளார்.[3] இங்ஙனமே ஈதலறம்புரியும் மேலோர் இயல்பு, ஈயாத உலோபியர் இயல்பு, பொருட் பெண்டிர் இயல்பு, கற்புடை மகளிர் இயல்பு ஆகியவை உவமைகளாக அமைந்து அவற்றைப் படிப் போரின் சிந்தையில் ஆழப் பதிக்கும் கவிஞரின் திறன் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது.[4] போர்க்களக் காட்சியைக் காட்டும் இடங்களிலும் பல உவமைகள் படிப்போரை களிப்புக் கடலில் ஆழ்த்துகின்றன.[5]

தற்குறிப் பேற்றம்

சயங்கொண்டார் கூறும் தற்குறிப் பேற்ற அணிகள் அவரது கற்பனை வளத்தைப் புலப்-


  1. தாழிசை-251, 261
  2. தாழிசை,464
  3. தாழிசை 317
  4. தாழிசை-477, 478, 479, 480, 483.
  5. தாழிசை-498, 499.