பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

69



10. கருவியும் காலமும்

இனி அறிவும் ஊக்கமும் உற்ற ஒருவனுக்கு மட்டுந்தான் தேவையான கருவிகள் கிடைப்பின் அவை பயனுடையவையாக இருக்கமுடியும். அவ்வறிவும் ஊக்கமும் அற்றவனிடம் அக்கருவிகள் இருந்து பயன் என்ன? இனி, அறிவும் ஊக்கமும் உடையவனும், அக்கருவியைக் காலம் அறிந்து செய்தல் வேண்டும்.

கலப்பையை உடைய உழவன், விதைப்புக் காலம் அறிந்து உழுதல் வேண்டும். இல்லாவிடில் அக்கலப்பையால் அவன் பெறும் பயன் இல்லையாகிவிடும். பனிக்கட்டிகளைத் தேக்கிச் சாறுபிழிந்து விற்கும் பொறியை வைத்திருக்கும் ஒருவர் நல்ல கோடை காலத்திலேயே அவ்வாணிகம் செய்ய முடியும். இதுபோல் கருவிக்குரிய காலமும், காலத்துக்குரிய கருவியும் தேர்ந்து கொண்டுதான் வினையில் ஒருவன் ஈடுபட வேண்டும். அக்கால் அவன் எத்தகைய அரிய வினைகளையும் செய்து விட முடியும்.

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின் (483)

என்பது திருமறை. இவ்வினை பழுதுபடாமல் செய்ய வல்லதே ஆட்சி என்பார் பேரறிஞர்.

கருவியும் காலமும் செய்கையும் செயும்
அருவினையும் மாண்டது அமைச்சு. (631)

என்னும் மெய்யுரையால், தனியொருவன் அவ்வாறு கருவியும் காலமும் அறியாமல் செய்யினும் அஃது அத் தனியொருவனுக்கு மட்டுந்தான் பெருங் கேடாக முடியும். ஆனால் அரசு அவ்வாறு செய்ய முற்படின் அது நாட்டினர் அனைவர்க்குமே ப்ெருங்கேடாக முடியுமன்றோ! இக்கால், அரசால் ஏற்படும் அனைத்துக் கேடுகளுக்கும் இத்திருக்குறளின் பொய்யா மொழியைப் பற்றாமையன்றோ கரணியம்!

இனி, திருவள்ளுவர் வினை செய்வார்க்கு இன்னோர் உணர்வையும் கருவியாகக் கூறுவார். அது மறதியின்மை. ஆம் மறதியின்மையும் ஓர் இன்றியமையாத கருவியே ஆகும். பொறியை இயக்கும் தொழிலாளி ஒருவர், தாம் தம் பொறியை இயக்கத் தொடங்குவதற்குமுன், அதை முழுவதும் ஒரு முறை நோட்டம் விடுதல் வேண்டும். முன் நாள் செய்த வினைகளின் பின், அதன் உறுப்புகள் யாவும் சரியாகப் பொருத்தப் பெற்று உள்ளனவா, இல்லை; திருகுகளும் பொருத்துகளும் இயக்க அசைவால் கழன்றும் தளர்ந்தும் உள்ளனவா என்று பார்த்துக் கண்காணித்த பின்னரே, பொறியை இயக்குதல் வேண்டும். இல்லெனில் எங்கோ ஒரு திருகாணி தளர்ந்து போவதால், பொறி பெரும் பழுதுக்கு உள்ளாகலாம். இதை மறவாமல், நாளும் செய்தல் வேண்டும். என்றாவது