பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

செயலும் செயல் திறனும்



அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள் (754)

எனவே, அத்தகைய பொருளை ஈட்டித் தருகின்ற செயல்களைத் தாம் நாம் செய்ய வேண்டும். அவ்வகை உயர்ந்த செயல்களைச் செய்ய வல்லவர்களையே, நல்லவர்களையே, நாம் நம் வினைத் துணைவர்களாகக் கொள்ளவேண்டும். அவ்வாறல்லாத தீயவர்களை, உலகியலைத் தவறாக அறிந்த கேடர்களை, அறவுணர்வு அறியாத பேதைகளை நாம் வினைத்துணைவர்களாகக் கொள்ளக்கூடாது. அவ்வாறின்றி, அவர்களை நாம் துணைவர்களாகக் கொண்டு செய்யும் வினைகள் அல்லது செயல்கள் அல்லது கருமங்கள் அல்லது உழைப்புகள் வீணாய்ப் போகும். தவறாகப் போகும். அல்லாவிடில் வெறும் விளம்பரம் பூண்டு நிற்கும். பிறர் ஏமாறுவதற்குரிய வகையில் ஆரவாரம் காட்டி நிற்கும். போலிப் பெருமை செய்து இருக்கும். அவற்றால் யாருக்கும் உண்மைப் பயன் விளைய முடியாது; நல்ல மாந்த ஆக்கத்திற்குதவ முடியாது என்பது பேரறிஞர் திருவள்ளுவர் மெய்யுரை எச்சரிக்கை உரை.

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்

பேதை வினைமேற் கொளின்

(836)

கையறியா என்பது செய்தல் அறியாத என்று பொருள்படும். கைசெய். செய்தல் அறியாத என்பதனுள் செயல் அறியாத, செய்கின்ற திறனறியாத, எந்தச் செயல் செய்ய வேண்டும் என்றறியாத, எச் செயலால் என்ன விளைவு நேரும் என்றறியாத, மொதத்தில் நன்மை, தீமை உணராத என்னும் பொருள்களெல்லாம் அடங்கும். அதனால்தான்,

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை

உள்ளறிவான் உள்ளம் கொளல்

(677)

என்னும் குறட்பாவில், வினை உள்ளறிவான் என்று செயலறிந்தவண்னக் கூறுவர் மெய்ப்பொருளாசான்.

10. ஒருவர்க்கொருவர் துணை

இனி, துணை என்று சொல்லும் பொழுது, ஒருவர் சார்பாக மட்டும் அதனைப் பொருள்படுத்தி விடக்கூடாது. இருவர் சார்பாகவும் அது பொருள்படும். முத்துக்குமரனாருக்குத் துரையரசனார். துணை என்றால், துரையரசனாருக்கும் முத்துக்குமரனார் துணை என்றே இருவரும் கருதிக் கொள்ளுதல் வேண்டும். இறைவாணனார், முல்லை வாணனாரைத் தமக்கு மட்டும் துணை யென்று கருதி விடக்கூடாது. முல்லைவாணனாருக்கும் இறைவாணனார் துணையாக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. இவ்விடத்தில் ஒன்றை மட்டும்