பக்கம்:வைணமும் தமிழும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10. வைணவ மந்திரங்கள்

எம்பெருமானைக் கிட்டப்பெற்று. அவனுக்கு அநுபவ கைங்கரியங்களைச் செய்து, அவனுடைய முக உல்லாசத்தைப் பெறவேண்டும் என்னும் இச்சையால் சமுசாரத்தில் வெறுப்புக் கொண்டவனாகிய முமுட்சுக்கு-மோட்சத்தில் விருப்பமுடையவனுக்கு ஆன்மசொரூபம்[1] இன்னது என்றும், அவ்வான்மா நலம் அடைவதற்கு உபாயம்(வழி) இன்னதென்றும், அவ்வழியைப் பற்றுவதனால் உண்டாகும் பயன் இன்னது என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். இவற்றைத் தெரிவிப்பனவே “திருமந்திரம்,துவயம், சரமசுலோகம் என்ற மூன்று மந்திரங்கள். இம்மூன்றும் சகல வேதங்களின் சாரமான பொருளைத் தெரிவிப்பதனாலும், இவற்றின் பெருமையை உணராதார் காதில் விழாதவாறு இவற்றை மறைக்க வேண்டியிருத்தலினாலும் இவை மந்திரங்கள்’ என்ற திருநாமம் பெற்றன.

இம்மூன்று மந்திரங்களுள் (1) திருமந்திரம் முக்கியமானது. ஆதலால் இதனை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். “ஒம் நமோ நாராயணாய’ என்பது திருமந்திரம்[2]. இதில்


  1. 1. ஆன்மசொரூபம்-உடலைக் காட்டிலும் வேறுபட்ட ஆன்மா தனக்கும் பிறருக்கும் உரிமையுடையதாயிராமல் ஈசுவரனுக்கே அடிமைப் பட்டவனாய் (சேஷபூதனாய்) இருத்தல்.
  2. 2. இது பதரிகாசிரமத்தில் இறைவன் நரனாகவும் நாராயணனாகவும் அவதரித்து நானுக்கு நாராயணன் உபதேசித்ததாக வரலாறு, பத்ரிகாசிரமம் இமய மலையிலுள்ள திவ்விய தேசம். 108 இல் ஒன்று.