பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

செயலும் செயல் திறனும்



9. நம்மினும் பொருள் வலியாரோடு ஈடுபடலாகாது.

{{gap}ஒரு செயலை நம்மோடு ஒத்தவராக உள்ளவரின் துணை கொண்டே செய்ய வேண்டும் என்னும் ஒரு நுட்பம் இங்குக் கவனிக்கத் தக்கது. நம்மிடம் ஒர் ஆயிர உருபா முதல் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நம்மோடு இணைத்து செயல்பட விரும்பும் ஒருவரிடம் அதைவிடப் பலமடங்கு பொருள் இருந்தால், அவரிடம் நாம் சேர்ந்து ஒரு வினையில் ஈடுபடலாகாது என்கிறார் பேராசான். மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது பலருக்கு இது விளங்காது. அவர்கள் எப்படி நினைப்பார்கள். "நம்மிடம் கொஞ்சம் பொருள்தானே உள்ளது. அவரிடம் உள்ள நிறைய பொருளை ஏன் பயன்படுத்திக் கொண்டு அவ்வினையைச் செய்யலாகாது?’ என்று நினைப்பார்களாம். ஆனால் இறுதியில் என்ன நேருமாம். பொருள் வலிவு படைத்தவர், சிறு பொருள் உடைய நம்மைத் தொடக்கத்தில் நாம் ஈடுபடுத்திய சிறு முதலீட்டைத் தந்து நம்மை விலக்கிவிடுவார்களாம். அப்பொழுது நமக்கு முன்பிருந்த உறுதி குலைந்து உள்ளம் துணுக்குற்றுச் சுருங்கிவிடும் என்கிறார். அதனால் தொடக்கத்திலேயே அவ்வாறு ஊக்கத்தைக் குறைத்து விடுகின்ற செயல்களில் ஈடுபட எண்ணாதே ஆசைப்படாதே என்கிறார் திருவள்ளுவர். இத்தகைய நிலைகள் நண்பர்கள் வழியாகத்தான் ஏற்படும். ஆகையால், நட்பாராய்தல் என்னும் அதிகாரத்தில் இந்த உண்மையைச் சொல்லுகிறார். பெரும்பாலும் ஒரு செயலைச் செய்கிற பொழுது. எல்லாரும், தனக்கு நெருக்கமான நண்பர்களைக் கலந்து கொண்டும், இயன்றால் அவர்களில் ஓரிருவரைத் துணைக் கொண்டுந்தாம் செயல் செய்ய முற்படுவர். ஆகையால் நட்பாராய்தல் அதிகாரத்தில் அதைச் சொல்வதே பொருத்தம் என்று கருதி அங்கே அதைச் சொன்னார். என்க.

10. செயலே பெருமையாகாது; பயனே பெருமை

இனி, இன்னொரு நிலையிலும் நம் உள்ளம் சிறுத்துப் போவதுண்டு. அஃதாவது நாம் செய்கின்ற செயலால் பலருக்கும் பயன் ஏற்பட வேண்டும். அல்லது நமக்காவது பயன் ஏற்பட வேண்டும். பிறர்க்கும் பயன்படாமல் நமக்கும் பன்படாமல் செய்கின்ற செயல் எதற்கு? நாம் . ஒரு மதுக்கடை வைத்து வாணிகம் செய்கிறோம். அதனால் யாருக்குப் பயன்? பலருக்கும் தீமை தரும் செயல் அது. அதனால் நமக்கும். பயனில்லை. மது விற்கும் காசு நமக்கு வருகிறதே, அது பயன். இல்லையா என்று கேட்கலாம். காசு வருவதே பயனாகாது. அதன் பயன் நோக்கித்தான் செயலைப் பெருமைக்கு உரியதா இல்லையா என்று பார்க்க வேண்டும். ஒருவன் செய்யும் செயலே பெருமையாகாது. ஒரு புறம் இருக்கும் பெரிய கல்லை இன்னொருபுறம் பரட்டித் தள்ளுகிறோம் என்றால் அச்செயலால் பயன் இருக்க வேண்டும் மற்றபடி கல்