பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று நினைக்கலாம். (அல்லது இவர் பிறந்த பெருமையால் அவ் வகுப் பினருக்கு சேக்கிழார் குடி என்று பெயர் வந்ததோ!) இவரது தந்தை யின் பெயர் குன்றத்தூர் கிழார் என்று கூறப்பட்டிருக்கிறது; குன்றத் தூர் எண்ணத்துர் என்று வழங்கும் ஊரின்பெயராகும். கிழார் என்பது ஒரு வேளாள வகுப்பின் பட்டப் பெயராகும். ஆகவே இப் பெயரை நாம் ஒருவாறு இவரது பட்டப்பெயராகக் கொள்ளலாம். சேய்-கிழார் =சேக்கிழார் என்ருயது என்பாருமுளர். (7) ரீ வில்லிபுத்துாரார் என்பது ரீ வில்லிபுத்தூரில் பிறந் தமையால் வந்த காரணப் பெயராகும். இது போலவே அடியார்க்கு கல்லார் நச்சிஞர்க்கினியர் என் பவை காரணப் பெயர்களாகத்தான் காணப்படுகின்றன. சில வைஷ்ணவப் பெயர்கள் (1) பொய்கையார், (2) பூதத்தார், (3) பேயார் என்னும் முதன் மூன்று ஆழ்வார்களின் பெயர்கள் காரணப் பெயர்களாகவே தோன்றுகின்றன. பொய்கையார் என்பது பொய்கையில் அவதரித்த வரென்றும், பூதத்தார் என்பது பூதம் எனும் பதத்தி நின்றும் பிறந்த தென்றும், பேயார் என்று பேய் எனும் மொழியினின்றும் உண்டான தென்றும், இம் மூன்று பெயர்களை காரணப் பெயர்களாகக் கொள்ளப் படுகின்றன. இவர்களது இயற் பெயர் தெரியவில்லை. (4) திருமழிசையாழ்வார் திருமழிசை எனும் ஊரிற் பிறந்த படியால் இவருக்குக் காரணப் பெயராகும். . கு) பெரியாழ்வார் பெரிய-ஆழ்வார் எனும் காரணப் பெய ராகும் இவரது இயற் பெயர் விஷ்ணு சித்தர் என்பதாம். விஷ்ணு வினிடத்தில் சித்தத்தைவைத்தவர் என்று பொருள்படும். (6) ஆண்டாள் மற்ருெரு பெயர் சூடிக்கொடுத்தாள் இவ் விரண்டும் சிறப்புக் காரணப் பெயர்களேயாம். இப் பெண் மணியின் இயற் பெயர் கோதை என்பதாம். நாயச்சியார் என்றும் மற்ருெரு பெயர் உண்டு. காய்ச்சி என்பதற்கு தலைவி என்று பொருளாம். த&ல வன் தலைவி ; நாயகன் நாய்ச்சி என்பதைக் காண்க. -