பக்கம்:கள்வர் தலைவன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கள்வர் தலைவன் (அங்கம்-1 கோஸ்கி, மக்கன்தேவ், வயத்தான், அந்தர்டப்பு, இரிச்சன், நாயனர், காயி, தோப்பாசர்மி, முதலிய கள்வர், குடத்தில் ஐலம் வேப்பில் முதலியவைகளே எடுத்துக்கொண்டு ஒரு புறமாக வருகின்றனர். வ. அடடே! எங்கேயோ பூட்டாண்டா! ஓடி பூட்டாண்டா தப்பிச்சிகினு. (மற்றெல்லோரும்) ஆ ம | ண் டா ! ஆமாண்டா : - கா. இல்லே இல்லே அதோ இருக்கிருன் பார் : இ. அடே கம்பசாமி பக்கத்திலே உக்காந்துகினு இருக்கி முர்டா ! கா. ஒரு வேளே அவர் தான் அவிழ்த்துவிட்டாரா என்ன ? கோ. அடே இரிச்சா போயி கேக்கலாமா சாமியே ? வ. ஆமாண்டா இண்ணேக்கி எப்புடியும் நரபலிகொடுக்க ணும் இல்லா போன இந்த வருஷமெல்லாம் வவுத்துலே மண்ணுதான் ! . . கோ, ஆமாம் ஆமாம், நீ போயி சாமியே கேளு. - கா. ஆமாம். அடே வயத்தான்! நீ தான் சரியானவன், போய் கேள், நாங்கள் பின்னல் வருகிருேம். - ஒரு வேளெ கோவிச்சிகின சாமி, என்னடா செய்யரது : ஒண்னும் கோவிச்சிக்க மாட்டாரு, நீ போயி கேளு. நாம் மாட்டேண்டா எனக்கு பயமா இருக்குது ! அடே கேட்டா எம்பங்கு தேங்கா தர்ரேன் ! தேங்காயா தேங்காயா ஒரு முடி தரணும். தர்ரோம் போ. தேங்கா இண்ணு ஆ இண்ணு வாயெ தெறக்குரும் பார் என்ன இண்ணுடா கேக்கரது : சத்i-காழி ஆய்விட்டது பலிகொடுக்கவேண்டுமென்று கேள். அடே, இல்லாவிட்டால் இவனேயே பிடித்து பலி கொடுத்து விடலாமாடா ! கோ. ஆ சரியான வேலை, வாஇப்படி, போயி கேக்கிரையா என்ன ? வ. இல்லே இல்லே, இதோ போயிகேக்கரேன். (அவர்களிருக்குமிடம் போகிருர்கள், வயத்தான் முதலிலும் மற்றவர்கள் பின்னுமாக.) i áll. சாமி. ஜெ. என்னடா அது? வ. உம்-(பின்னல் இருப்பவர்களுக்குச் சைகை செய்கிருன்) உம்-ஏன்னடா சொல்றது என்னடா சொல்ரது? |திரும்பி மற்றவர்களைக் கேட்கிறன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/8&oldid=779788" இலிருந்து மீள்விக்கப்பட்டது