பக்கம்:கள்வர் தலைவன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள் வர் தலைவன் முதல் அங்கம் முதற் காட்சி இடம்:- தாமகாரண்யத்தில் ஒரு காட்டாற்றை யடுத்த அடர்ந்த இடம். இங்குள்ள கள்வர்கோயிலுக்கெதிரில் ஏமாங்கதன் பலிபீடத்தருகிலுள்ள 研, ஒரு ஸ்தம்பத்திற் கட்டப்பட்டிருக்கிருன். ஐயோ! இப்பாதகர்கள் சீக்கிரம் வந்து என்னைக் கொன்று விட மாட்டார்களா! எத்தனை நேரம் கானிவ் வேதனையி லிருப்பேன் ? என் ஐம்பொறிகளும் கலங்குகின்றனவே. என் மனமும் ஒரு வழி கில்லாது பெருஞ்சுழல் மத்தியி லகப்பட்ட துரும்பைப் போல் தத்தளிக்கின்றதே! இம் மனே சஞ்சலத்தையும் தேக பாதையையும் அனுபவிப் பதைவிட சீக்கிரம் இறப்பேயிைன் நான் எவ்வளவு பாக்கியம் பண்ணினவனுயிருப்பேன். ஐயோ ! இக்கதி யனுபவிப்பதற்கோ நான் மாறுவேடம் பூண்டு புஷ்பபுரி யினின்றும் தப்பிவந்தேன் ! நான் அங்கேயே இருந்திருப் பேணுயின் யாராவது என்னே ஹிம்சியாது சீக்கிரம் கொன்றுவிட்டிருப்பார்களே! இந்த யமவேதனேக் கெல் லாம் ஆளாயிருக்க மாட்டேனே 1 ஐயோ! இக்கொடிய பாதகர்கள் கையிற் படுமுன் என்னுயிரையாவது மாய்த் துக்கொண்டிருக்கலாகாதா கான்!-ஆ ! யார் விதி யாரை விட்டது ஈசனேl ஈசனே! என்னேக் கைவிட்டீரே!-சீ! ஈசன் ஒருவனிருக்கின்ருனே இருந்தால் ஏன் கரன் இத் கதிக்கு ஆளாக்கப்பட்டிருக்கவேண்டும் ! நான் புத்தி அறிந்தது முதல் பிறருக்கு ஒரு திங்கும் செய்ததுமில்லை கினைத்ததுமில்லை. அப்படியிருக்க நான் ஏன் இக்கதிக்கு வரவேண்டும்? இதைவிடக் கேடான கதி ஒருவனுக்கு வாய்க்கப் போகின்றதோ?-பிறருக்கு நன்மை செய் தால் தனக்கு நன்மை பயக்குமென்கிருர்களே! நான் பிற ருக்கு நன்மையே செய்திருக்க எனக்கு தீமையே பயந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/5&oldid=779755" இலிருந்து மீள்விக்கப்பட்டது