பக்கம்:கள்வர் தலைவன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 கள்வர் தலைவன் |அங்கம்-1 ஜெ. ஐயனே, சற்று முன்பாக என்சொற்படி நடக்கின்றேன் என்றீரே இதுதானே ? இதை ஏற்றுக்கொள்ளும், பிறகு உமக்கு எல்லாம் விளங்கச்சொல்கின்றேன். கோ. இத்தனி காலம் உங்கீழ் இருந்தோம். இப்போ நீங்க பூட்டைங்கண்ணு நாங்களும் உங்களோடு வர்ரோம், நீங்க பூட்டாக்கா அப்புறம்மற். ஆமாம் சாமி. ஆமாம் சாமி. ஜெ. அடெ நான் சொன்னபடி செய்யுங்கள். நான் அடிக் கடி இங்குவந்து உங்களுடைய கேஷமத்தை விசாரித்துக் கொண்டே இருப்பேன், ஒன்றும் பயப்படவேண்டாம். இது வரையில் எப்படி என் சொற்படி நடந்து வந்தீர் களோ அது போலவே இனி இவர் சொற்படி கடக்க வேண்டும் தெரியுமா ? எல். நீங்க சொல்லரபடி செய்ரோம் சாமி ! ஜெ. நாயனுர், கான் மேலேக்குகைக்குச் செல்கின்றேன். நீ இன்னும் மற்ற கள்வரையெல்லாம் அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர். ஐயனே, வாரும் செல் வோம். உம்முடன் இவர்களைப் பற்றி சில விஷயங்கள் சொல்லவேண்டும். சொல்லுகின்றேன் வாரும். அதுவு மன்றி நீர் மிகவும் பசியுற்றிருக்கின்றீர். வாரும் போ வோம். (ஏமாங்கதனை அழைத்துச் செல்கின்றன்.) இ. அடே இதென்ன இது கம்ப சாமி எங்கேயோ பூட்ராராம் வேருெரு சாமியை வைச்சூட்டுப் போரா ராமே ! இந்த சாமியெ பார்த்தாலும் நல்லவராட்டங் தான் இருக்குதுரா. ஆலுைம் இவரெ பார்த்தா தைரிய் சாலியாயில்லேடா ம. இல்லெடா, நம்ப சாமி சீக்கிரமா வந்துடுவாரு. கோ. அதுவமில்லாமே அடிக்கடி வர்ரேன் இண்ணுரே. நா. ஆம் ஆம். சீக்கிரம் வாருங்கள் போவோம். அடெ அந்தர் டப்பு எங்கேடா ? வ. அடே நம்ப பொலிபோட்ட எடத்திலே ஈச்சங்கள்ளெ வச்சூட்டு வந்துாட்டேண்டா ! இல்லேடா, அத்தை நான் வரும்போது பார்த்தேன் காணுேமே. ஒருவேளெ அக்தர்டப்பு குடிச்சூட்டானே ? ஆமாண்டா ஆமாண்டா இதோ குடிச்சூட்டு வுய்ந்து கினு வாராம்பாரு. (அந்தர்டப்பு குடித்துவிட்டு விழுந்து கொண்டு வருகிறன்.) இ. .ெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/16&oldid=779719" இலிருந்து மீள்விக்கப்பட்டது