பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

117



வீசியது; அவன் களைப்பை ஆற்றியது. தமயந்தி அவள் அவன் முன் இல்லை; அவளைத் தன் மனத்தில் இருந்து அகற்றினான். பிறன் மனைவி அவள் என்ற மதிப்பு அவனுக்கு உதித்தது; உத்தமன் ஆயினான்.

நளன் அவனுக்கு என்று வகுத்த பள்ளி; இவன் சென்றதால் அது மடப்பள்ளியாயிற்று. சோறு சமைக்க வேறு வகைப்பட்ட பாத்திரங்கள் கழுவி வைக்கப் பட்டிருந்தன. அடுப்பு எரித்து அரசி களைந்து உலை ஏற்றி உருப்படியாகச் சமையல் செய்ய வேண்டும்.

பணம் தேவைப்பட்டால் அதை எண்ணிக் கொண்டிருக்கத் தேவையில்லை. ‘செக்’ எழுதினால் அதை நீட்டினால் பணம் கைக்கு வந்து சேர்கிறது.

இவன் வங்கியில் வைத்திருக்கும் வைப்புப்போல் வரங்களைப் பெற்றிருந்தான். “அங்கி, அமுதம், பருகும் நீர், அணி, ஆடை எது வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் நீ பெற்றுக் கொள்ளலாம்” என்று தேவர்கள் வரம் தந்திருந்தனர். அதனை இப்பொழுது காசு ஆக்கிக் கொண்டான்.

புகையில்லாமலேயே வகைவகையாக உணவுகளை வரவழைக்க முடிந்தது. சமையல் பிரமாதம், காய்கறிகள் கனி வகைகள் இனிப்புகள் எல்லாம் அங்கு வந்து சேர்ந்து விட்டன. சரவணன் அருளால் சகலமும் கிடைப்பதுபோல் அவனுக்கு அனைத்தும் வந்து சேர்ந்தது.

நளன் தனிமைப் படுத்தப்பட்டான். இனி தீவிர விசாரணை நடத்துவது என்று காவிரிப் பெண்ணாள் கருத்தினைக் கொண்டாள்; கண்ணீர் பெருக்குவதில் அவள் காவிரியை ஒத்து இருந்தாள்.

சேடி ஒருத்தியை அழைத்தாள் “நீ செய்தி அறிந்துவா! ஒன்று அறிக; உற்று அடைந்து அவனைப் பற்றி செய்திகள் திரட்டுக” என்றாள்.